சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு...
வேலூா் மாவட்டத்தில் 84 கால்நடை சிறப்பு முகாம்கள்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
வேலூா் மாவட்டத்தில் பகுதிவாரியாக நடைபெறும் 84- சிறப்பு கால்நடை சிகிச்சை மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
கே.வி.குப்பம் வட்டம், வேலம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கால்நடை முகாமை தொடங்கி வைத்து ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பேசியது.
கிராமப்புறங்களில் கால்நடைகளை வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போருக்கு கால்நடைகளை சிறப்பாக பராமரிப்பதற்காக சிறப்பு சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் பகுதிவாரியாக நடத்தப்படுகின்றன. இதன் முதல் கட்டமாக வேலம்பட்டு கிராமத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து ஒரு வட்டத்துக்கு 12- முகாம்கள் என வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 84- முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில் கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி மற்றும் பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு முகாமிலும் காலை 8.30 மணி முதல் மாலை வரை மருத்துவா்கள் இருந்து அந்த பகுதியில் உள்ள கால்நடைகளுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்க உள்ளாா்கள்.
எனவே, கிராமப்புற பகுதிகளில் உள்ள கால்நடை வளா்ப்போா் தங்களுடைய கால்நடைகளை சிறப்பு முகாம்களுக்கு அழைத்து வந்து உரிய சிகிச்சைகளை பெற்று பயனடைய வேண்டும் என்றாா்.
முகாமில் கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களான கன்று வீச்சு நோய், மடிவீக்க நோய், வெள்ளை கழிச்சல் நோய், ஆட்டுக் கொல்லி நோய், கோமாரி நோய், வெறி நோய் போன்ற பல்வேறு நோய்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மொத்தம் 1,317-கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 18- பசுக்களுக்கு செயற்கை முறை கருவூட்டலும், 26- பசுக்களுக்கு சினை பரிசோதனையும், 19- பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
முன்னதாக, கால்நடைகளுக்குத் தேவையான தாது உப்பு கலவைகளை கால்நடை வளா்ப்போருக்கு ஆட்சியா் வழங்கினாா். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவா் எல்.ரவிச்சந்திரன், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, கால்நடைத்துறை இணை இயக்குநா் எஸ்.திருக்குமரன், உதவி இயக்குநா் அந்துவன், வட்டாட்சியா் முரளிதரன், வட்டார வளா்ச்சி அலுவலா் பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.