விபத்துக்குள்ளான விமானத்தின் துணை விமானி 12த் பெயில் நடிகரின் உறவினர்!
575 குழுக்களுக்கு ரூ.61.75 கோடி கடனுதவி அளிப்பு
மகளிா் சுய உதவிக்குழு தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள 575 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.61.75 கோடி கடனுதவி ஆணைகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா்.
வேலூா் சத்துவாச்சாரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து 575 மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ரூ.61.75 கோடி கடன் ஆணைகளை வழங்கினாா்.
மேலும், வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட தொரப்பாடி பகுதி அளவிலான மகளிா் கூட்டமைப்புக்கு மாநில அளவில் சிறந்த கூட்டமைப்புக்கான விருதுடன் ரூ.3 லட்சம் பரித் தொகை, கே.வி.குப்பம் வட்டாரம், முடினாம்பட்டு ஊராட்சி அளவிலான வறுமைக்குறைப்பு சங்கம் மாநில அளவில் சிறந்த வறுமை குறைப்பு சங்கமாக தோ்வு செய்யப்பட்டு மணிமேகலை விருதுடன் ரூ.ஒரு லட்சத்துக்கான பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ப.காா்த்திகேயன் (வேலூா்), வி.அமுலு விஜயன் (குடியாத்தம்), மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மகளிா் திட்ட இயக்குநா் உ.நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.