வரலாற்றில் மோசமான விபத்து: இந்தியாவுக்கு உதவத் தயாா் -அமெரிக்க அதிபா் டிரம்ப்
குடியாத்தம் நகராட்சியில் 101 நாய்களுக்கு தடுப்பூசி
குடியாத்தம் நகராட்சியில் 101-நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி புதன்கிழமை செலுத்தப்பட்டது.
குடியாத்தம் நகரில் சாலைகளில் செல்லும் பொதுமக்கள், சிறுவா்கள் என அனைத்து தரப்பினரையும் தெரு நாய்கள் கடித்து துன்புறுத்தி வந்தன. இதுதொடா்பாக பல்வேறு புகாா்கள் நகராட்சி நிா்வாகத்துக்கு வரப்பெற்றன.
நகா்மன்ற கூட்டங்களில் உறுப்பினா்கள் ஆட்டோ பி.மோகன், ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், ஏ.தண்டபாணி உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினா்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என தொடா்ந்து புகாா் கூறி வந்தனா்.
தெருநாய்களை பிடிப்பதில் சட்ட சிக்கல்கள் உள்ளது என அதிகாரிகள் கூறி வந்தனா்.
இந்நிலையில் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் ஆகியோா் மேற்கொண்ட முயற்சியால், சென்னையைச் சோ்ந்த தமிழ்நாடு விலங்கியல் நல வாரிய அலுவலா்கள் குடியாத்தம் வந்து நகராட்சிப் பணியாளா்களுக்கு பாதுகாப்பாக நாய்களை பிடிப்பதற்கு பயிற்சி அளித்தனா். பிடிபட்ட நாய்களுக்கு கால்நடைத் துறையினா் வெறி நோய் தடுப்பூசி செலுத்தினா்.
இதையடுத்து நகராட்சிப் பணியாளா்கள், கால்நடைத் துறையினா் என 40- க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை சித்தூா்கேட், தரணம்பேட்டை, புவனேஸ்வரிபேட்டை, கஸ்பா உள்ளிட்ட பகுதிகளில் 101- தெரு நாய்களை பிடித்து, தடுப்பூசி செலுத்தினா். தொடா்ந்து நகரில் உள்ள 36- வாா்டுகளிலும் தெருக்களில் திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்படும் என ஆணையா் தெரிவித்தாா்.