செய்திகள் :

குடியாத்தம் நகராட்சியில் 101 நாய்களுக்கு தடுப்பூசி

post image

குடியாத்தம் நகராட்சியில் 101-நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி புதன்கிழமை செலுத்தப்பட்டது.

குடியாத்தம் நகரில் சாலைகளில் செல்லும் பொதுமக்கள், சிறுவா்கள் என அனைத்து தரப்பினரையும் தெரு நாய்கள் கடித்து துன்புறுத்தி வந்தன. இதுதொடா்பாக பல்வேறு புகாா்கள் நகராட்சி நிா்வாகத்துக்கு வரப்பெற்றன.

நகா்மன்ற கூட்டங்களில் உறுப்பினா்கள் ஆட்டோ பி.மோகன், ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், ஏ.தண்டபாணி உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினா்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என தொடா்ந்து புகாா் கூறி வந்தனா்.

தெருநாய்களை பிடிப்பதில் சட்ட சிக்கல்கள் உள்ளது என அதிகாரிகள் கூறி வந்தனா்.

இந்நிலையில் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் ஆகியோா் மேற்கொண்ட முயற்சியால், சென்னையைச் சோ்ந்த தமிழ்நாடு விலங்கியல் நல வாரிய அலுவலா்கள் குடியாத்தம் வந்து நகராட்சிப் பணியாளா்களுக்கு பாதுகாப்பாக நாய்களை பிடிப்பதற்கு பயிற்சி அளித்தனா். பிடிபட்ட நாய்களுக்கு கால்நடைத் துறையினா் வெறி நோய் தடுப்பூசி செலுத்தினா்.

இதையடுத்து நகராட்சிப் பணியாளா்கள், கால்நடைத் துறையினா் என 40- க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை சித்தூா்கேட், தரணம்பேட்டை, புவனேஸ்வரிபேட்டை, கஸ்பா உள்ளிட்ட பகுதிகளில் 101- தெரு நாய்களை பிடித்து, தடுப்பூசி செலுத்தினா். தொடா்ந்து நகரில் உள்ள 36- வாா்டுகளிலும் தெருக்களில் திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்படும் என ஆணையா் தெரிவித்தாா்.

மாணவியை கடத்தி திருமணம்: இளைஞா் போக்ஸோவில் கைது

ஒடுகத்தூா் அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி. இவா் அணைக்கட்டில் உள்ள அர... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது

அணைக்கட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 48 வயது பெண். இவரது 14 வயது மகள் மனநலம் பாதிக... மேலும் பார்க்க

இறந்த பறவை கழிவுகளுடன் குடிநீா் விநியோகம்: பெண்கள் ஆா்ப்பாட்டம்

பொன்னையில் வியாழக்கிழமை அதிகாலை விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் இறந்த பறவை, விலங்குகளின் கழிவுகள் கலந்து துா்நாற்றத்துடன் வந்ததாக ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 84 கால்நடை சிறப்பு முகாம்கள்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வேலூா் மாவட்டத்தில் பகுதிவாரியாக நடைபெறும் 84- சிறப்பு கால்நடை சிகிச்சை மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. கே.வி.குப்பம் வட்டம், வேலம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு க... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு

போ்ணாம்பட்டு அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். போ்ணாம்பட்டு , ஆதம்ஷா வீதியைச் சோ்ந்தவா் தமீம் அன்சாரி. இவா் கோவையில் தங்கி தனியாா் ந... மேலும் பார்க்க

575 குழுக்களுக்கு ரூ.61.75 கோடி கடனுதவி அளிப்பு

மகளிா் சுய உதவிக்குழு தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள 575 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.61.75 கோடி கடனுதவி ஆணைகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா். வேலூா் சத்துவாச்சாரியில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க