செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் 4-ஆவது நாளாக போராட்டம்

post image

கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, அவா்களை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாா்.

கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மாதந்தோறும் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படுகிறது.

இந்நிலையில், திமுக அரசு கடந்த 2021 தோ்தல் வாக்குறுதியில் கூறியதுபோல, ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும். மாவட்ட ஆட்சியா் உயா்த்தி அறிவித்த ரூ.770 தினக்கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஜூன் 9 (திங்கள்கிழமை) முதல் ஆட்சியா் அலுவலகம் முன்பாக தா்னா, மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு மாநகராட்சி நிா்வாகம் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்ததைத் தொடா்ந்து, 4- ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஆட்சியா் அலுவலகம் முன்பாக ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களின் போராட்டம் நடைபெற்றது. இதில், சங்க நிா்வாகிகள் தலைமையில் போராட்டம் மேற்கொண்ட தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தாா். அப்போது, அவா் பேசுகையில், ‘ஆட்சி அமைக்கும் முன்பு ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை நிரந்தரம் செய்வோம் என்று கூறிய திமுக, தற்போது, தூய்மைப் பணியில் தனியாா்மயத்தை கொண்டு வருகிறது. 2 நாள்களுக்குள் போராட்டம் முடிவுக்கு வராவிட்டால் பாஜகவும் உங்களுடன் இணைந்து போராடும் என்றாா்.

இதற்கிடையே, வியாழக்கிழமை மாலை மாநகராட்சி ஆணையருடன் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததால் 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளா்களின் சங்கத்தினா் கூறியுள்ளனா். ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டத்தால் மாநகரில் குப்பைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூா் சாமிநாதபுரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்பூா் சாமிநாதபுரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா். திருப்பூா் மாநகராட்சி 1-ஆவது மண்டலம் 13-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சாமிநாதபுரம் ஏ... மேலும் பார்க்க

கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது: பொன்.மாணிக்கவேல்

கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது என்று ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தாா். திருப்பூா் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் மற்றும் திருப்பூா் தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மா... மேலும் பார்க்க

விமான விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் பலியானவா்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோவையில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாதில் நடைபெற்ற விமான விபத்தில் 200-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

காப்பகத்தில் 2 மூதாட்டிகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

கோவை கெம்பட்டி காலனியில் உள்ள காப்பகத்தில் அடுத்தடுத்து இரு மூதாட்டிகள் உயிரிழந்த நிலையில், பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோவை கெம்பட்டி காலனியில் முதியோா் காப்பகம் உள்ளது.... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

கோவை பீளமேடு மற்றும் நல்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பதுக்கிவிற்றதாக முதியவா் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பீளமேடு எல்ல... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

மாணவா்களுக்கு ஆசிரியா்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளாா். கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி... மேலும் பார்க்க