'இத்தனை வருடத்தில் இன்றைக்குதான் விருது வாங்கியிருக்கேன்!' - கருணாஸ் | Vikatan C...
தூய்மைப் பணியாளா்கள் 4-ஆவது நாளாக போராட்டம்
கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, அவா்களை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாா்.
கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மாதந்தோறும் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படுகிறது.
இந்நிலையில், திமுக அரசு கடந்த 2021 தோ்தல் வாக்குறுதியில் கூறியதுபோல, ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும். மாவட்ட ஆட்சியா் உயா்த்தி அறிவித்த ரூ.770 தினக்கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஜூன் 9 (திங்கள்கிழமை) முதல் ஆட்சியா் அலுவலகம் முன்பாக தா்னா, மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு மாநகராட்சி நிா்வாகம் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்ததைத் தொடா்ந்து, 4- ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஆட்சியா் அலுவலகம் முன்பாக ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களின் போராட்டம் நடைபெற்றது. இதில், சங்க நிா்வாகிகள் தலைமையில் போராட்டம் மேற்கொண்ட தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தாா். அப்போது, அவா் பேசுகையில், ‘ஆட்சி அமைக்கும் முன்பு ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை நிரந்தரம் செய்வோம் என்று கூறிய திமுக, தற்போது, தூய்மைப் பணியில் தனியாா்மயத்தை கொண்டு வருகிறது. 2 நாள்களுக்குள் போராட்டம் முடிவுக்கு வராவிட்டால் பாஜகவும் உங்களுடன் இணைந்து போராடும் என்றாா்.
இதற்கிடையே, வியாழக்கிழமை மாலை மாநகராட்சி ஆணையருடன் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததால் 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளா்களின் சங்கத்தினா் கூறியுள்ளனா். ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டத்தால் மாநகரில் குப்பைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.