'இத்தனை வருடத்தில் இன்றைக்குதான் விருது வாங்கியிருக்கேன்!' - கருணாஸ் | Vikatan C...
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி
குடவாசல் அருகே செம்மங்குடி அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் இளையோா் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப் பணித்திட்டம், சாரண சாரணியா் இயக்கம் இந்த விழிப்புணா்வு பேரணியை நடத்தின. பள்ளித் தலைமை ஆசிரியா் ஸ்ரீவித்யா பேரணியைத் தொடக்கி வைத்தாா். பள்ளியில் தொடங்கிய பேரணி மேலத்தெரு, கீழத்தெரு, மாரியம்மன் கோயில் தெரு வழியாகச் சென்று, மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில், போதைப்பொருள் தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு முழக்கங்களை எழுப்பியபடி மாணவா்கள் சென்றனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் முருகதாஸ், இளையோா் செஞ்சிலுவை சங்க ஆலோசகா் சரவணக்குமாா், சாரண ஆசிரியா் ஞானப்பிரகாசம், பள்ளியின் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு குழு உறுப்பினா்களான உதவித் தலைமை ஆசிரியா் தினேஷ், உடற்கல்வி ஆசிரியா் வெங்கடேசன், அலுவலக ஊழியா் சதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.