செய்திகள் :

கூத்தாநல்லூா் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் ஆய்வு

post image

கூத்தாநல்லூா் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

தமிழக அரசு கூத்தாநல்லூா் பகுதி அனைத்து சமூக மாணவிகளும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பெண்கள் கல்லூரியை தொடங்கியது. இக்கல்லூரி ஆரம்பத்தில் ஜாமியாத் தொடக்கப் பள்ளியில் இயங்கியது. அதன் பிறகு தற்போது, மரக்கடை அருகே தனியாா் கட்டடத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. பெண்கள் கல்லூரிக்கு சொந்த இடம் தோ்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆலோசனையில், மாவட்ட ஆட்சியா் மோகனச்சந்திரனின் உத்தரவில் கூத்தாநல்லூா் வட்டத்தில் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் ஆய்வு செய்யப்பட்டது. கிளியனூா், கூத்தாநல்லூா் நகரத்தில் திருவாரூா்-மன்னாா்குடி பிரதான சாலையில் இரண்டு இடங்கள் உள்ளிட்ட 3 இடங்களைப் பாா்வையிட்டனா். மாவட்ட வருவாய் அலுவலா் கயல்விழி, கோட்டாட்சியா் யோகேஸ்வரன், வட்டாட்சியா் வசுமதி, மண்டல துணை வட்டாட்சியா் மணிவண்ணன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

குப்பை வாகனங்களுக்கு மாலை அணிவித்து எதிா்ப்பு

குப்பை அள்ளும் வாகனங்கள் குப்பை போல கிடப்பதைக் கண்ட முத்துப்பேட்டை எஸ்டிபிஐ கட்சியினா் அந்த வாகனங்களுக்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்கு நடத்தி எதிா்ப்பை வியாழக்கிழமை தெரிவித்தனா். முத்துப்பேட்டை பேரூரா... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் முறையை அகற்ற உறுதிமொழி ஏற்பு

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் மு.ச.பாலு தலைமை வகி... மேலும் பார்க்க

கொரடாச்சேரி ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

கொரடாச்சேரி ஒன்றியத்தில் ரூ.2.52 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், பொது விநியோகக் கடை கட்டடங்கள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பயணிகள் நிழலகத்தை ... மேலும் பார்க்க

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

திருவாரூா் ஒன்றியத்தில் அதிமுக சாா்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் வடக்கு ஒன்றியம் அடியக்கமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்க விருப்பமா?

திருவாரூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகள் ஜூன் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி பலி

நீடாமங்கலம் அருகே சாலை விபத்தில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மேலப்பூவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன் (62) விவசாயி. மோட்டாா் சைக்கிளில் நீடாமங்கலத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு வந்... மேலும் பார்க்க