குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
குழந்தை தொழிலாளா் முறையை அகற்ற உறுதிமொழி ஏற்பு
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் மு.ச.பாலு தலைமை வகித்தாா். பங்கேற்ற மாணவா்கள் இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும் அவா்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும் தொழிலாளா் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்துவேன் என்றும் தமிழகத்தை குழந்தை தொழிலாளா் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனா். ஏற்பாடுகளை முதுநிலை ஆசிரியா் சி.கவியரசன் செய்திருந்தாா்.