கொரடாச்சேரி ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு
கொரடாச்சேரி ஒன்றியத்தில் ரூ.2.52 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், பொது விநியோகக் கடை கட்டடங்கள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பயணிகள் நிழலகத்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.
களத்தூா் ஊராட்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சிக் கூடம், மேலராதாநல்லூா் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.15.49 லட்சம் மதிப்பிலான பொது விநியோகக் கடை கட்டடம், பருத்தியூா் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.15 லட்சம் மதிப்பிலான பொது விநியோகக் கடை கட்டடம் ஆகியவை திறக்கப்பட்டன.
தேவா்கண்டநல்லூா் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டங்களின் கீழ் ரூ.16.79 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையக் கட்டடம், காட்டூா் ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்பிலான பொது விநியோகக் கட்டடம், பண்ணைவிளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டங்களின் கீழ் ரூ.16.79 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையக் கட்டடங்கள் திறக்கப்பட்டன.
நாகக்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.28.02 லட்சம் மதிப்பிலான ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், அரசவனங்காடு ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பிலான பயணிகள் நிழலகம், எண்கண் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பிலான ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடம் என மொத்தம் ரூ.2.52 கோடி மதிப்பிலான கட்டடங்களை மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் திறந்து வைத்தனா்.
திருமதிக்குன்னம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணா்வு முகாமையும் அவா்கள் தொடங்கி வைத்தனா்.
கால்நடைத்துறை இணை இயக்குநா் ரிச்சா்ட்ராஜ், கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் சித்ரா, துணை இயக்குநா் விஜயகுமாா், உதவி இயக்குநா் சிவகுமாா், மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபு, செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.