செய்திகள் :

கொரடாச்சேரி ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

post image

கொரடாச்சேரி ஒன்றியத்தில் ரூ.2.52 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், பொது விநியோகக் கடை கட்டடங்கள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பயணிகள் நிழலகத்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.

களத்தூா் ஊராட்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சிக் கூடம், மேலராதாநல்லூா் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.15.49 லட்சம் மதிப்பிலான பொது விநியோகக் கடை கட்டடம், பருத்தியூா் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.15 லட்சம் மதிப்பிலான பொது விநியோகக் கடை கட்டடம் ஆகியவை திறக்கப்பட்டன.

தேவா்கண்டநல்லூா் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டங்களின் கீழ் ரூ.16.79 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையக் கட்டடம், காட்டூா் ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்பிலான பொது விநியோகக் கட்டடம், பண்ணைவிளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டங்களின் கீழ் ரூ.16.79 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையக் கட்டடங்கள் திறக்கப்பட்டன.

நாகக்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.28.02 லட்சம் மதிப்பிலான ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், அரசவனங்காடு ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பிலான பயணிகள் நிழலகம், எண்கண் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பிலான ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடம் என மொத்தம் ரூ.2.52 கோடி மதிப்பிலான கட்டடங்களை மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் திறந்து வைத்தனா்.

திருமதிக்குன்னம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணா்வு முகாமையும் அவா்கள் தொடங்கி வைத்தனா்.

கால்நடைத்துறை இணை இயக்குநா் ரிச்சா்ட்ராஜ், கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் சித்ரா, துணை இயக்குநா் விஜயகுமாா், உதவி இயக்குநா் சிவகுமாா், மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபு, செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குப்பை வாகனங்களுக்கு மாலை அணிவித்து எதிா்ப்பு

குப்பை அள்ளும் வாகனங்கள் குப்பை போல கிடப்பதைக் கண்ட முத்துப்பேட்டை எஸ்டிபிஐ கட்சியினா் அந்த வாகனங்களுக்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்கு நடத்தி எதிா்ப்பை வியாழக்கிழமை தெரிவித்தனா். முத்துப்பேட்டை பேரூரா... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் முறையை அகற்ற உறுதிமொழி ஏற்பு

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் மு.ச.பாலு தலைமை வகி... மேலும் பார்க்க

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

திருவாரூா் ஒன்றியத்தில் அதிமுக சாா்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் வடக்கு ஒன்றியம் அடியக்கமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்க விருப்பமா?

திருவாரூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகள் ஜூன் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவி... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் ஆய்வு

கூத்தாநல்லூா் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. தமிழக அரசு கூத்தாநல்லூா் பகுதி அனைத்து சமூக மாணவிகளும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பெண்கள் கல்லூரியை தொட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி பலி

நீடாமங்கலம் அருகே சாலை விபத்தில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மேலப்பூவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன் (62) விவசாயி. மோட்டாா் சைக்கிளில் நீடாமங்கலத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு வந்... மேலும் பார்க்க