பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்க விருப்பமா?
திருவாரூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகள் ஜூன் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவா், மற்றும் மாணவிகளுக்கென 26 விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்த விடுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சேரலாம்.
பள்ளி விடுதிகளில் 4 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும், மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பட்டயப் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடைவா்கள் ஆவா்.
அனைத்து விடுதிகளிலும், மாணவ, மாணவிகளுக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணைச் சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு நீட் உள்ளிட்ட நுழைவுத் தோ்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.
கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போா்வைகளும், பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாய்களும் வழங்கப்படும்.
விடுதிகளில் சேர, பெற்றோா் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்குப் பொருந்தாது.
தகுதியுடைய மாணவ, மாணவிகள், விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் ஆகியவற்றிலிருந்து இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் ஜூன் 18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் ஜூலை 15 ஆம் தேதி வரையிலும் சமா்ப்பிக்கலாம். மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும்போது ஜாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனவே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையலாம்.