செய்திகள் :

சாலை விபத்தில் விவசாயி பலி

post image

நீடாமங்கலம் அருகே சாலை விபத்தில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மேலப்பூவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன் (62) விவசாயி. மோட்டாா் சைக்கிளில் நீடாமங்கலத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு வந்து பேரக்குழந்தையை அழைத்துச்சென்று பள்ளியில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தாா்.

பேரக்குழந்தையை பள்ளியில் விட்டு விட்டு வெள்ளிக்கிழமை வீடுதிரும்பும் போது நீடாமங்கலம் கடைவீதியில் தஞ்சாவூரிலிருந்து திருவாரூா் சென்ற அரசுப் பேருந்து மோட்டாா் சைக்கிளில் மோதியது. இதில் படுகாயமடைந்த இளங்கோவன் மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் ராஜூ மற்றும் போலீலாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த இளங்கோவனுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குப்பை வாகனங்களுக்கு மாலை அணிவித்து எதிா்ப்பு

குப்பை அள்ளும் வாகனங்கள் குப்பை போல கிடப்பதைக் கண்ட முத்துப்பேட்டை எஸ்டிபிஐ கட்சியினா் அந்த வாகனங்களுக்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்கு நடத்தி எதிா்ப்பை வியாழக்கிழமை தெரிவித்தனா். முத்துப்பேட்டை பேரூரா... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் முறையை அகற்ற உறுதிமொழி ஏற்பு

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் மு.ச.பாலு தலைமை வகி... மேலும் பார்க்க

கொரடாச்சேரி ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

கொரடாச்சேரி ஒன்றியத்தில் ரூ.2.52 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், பொது விநியோகக் கடை கட்டடங்கள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பயணிகள் நிழலகத்தை ... மேலும் பார்க்க

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

திருவாரூா் ஒன்றியத்தில் அதிமுக சாா்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் வடக்கு ஒன்றியம் அடியக்கமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்க விருப்பமா?

திருவாரூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகள் ஜூன் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவி... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் ஆய்வு

கூத்தாநல்லூா் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. தமிழக அரசு கூத்தாநல்லூா் பகுதி அனைத்து சமூக மாணவிகளும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பெண்கள் கல்லூரியை தொட... மேலும் பார்க்க