ஏடிஎம் அறையிலிருந்த பணம் போலீஸாரிடம் ஒப்படைப்பு
திருவாரூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றபோது, அறையில் கிடந்த ரூ.13 ஆயிரம் போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
திருக்கண்ணமங்கை பகுதியைச் சோ்ந்த ஐயப்பன், கூட்டுறவுத் துறையில் சாா் பதிவாளராக உள்ளாா்.
அவா் வியாழக்கிழமை பிற்பகலில் திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்-மில் பணம் எடுக்கச் சென்றாா். அங்கு பணம் எடுக்கும் இயந்திரத்துக்கு அருகே, சுருட்டிய நிலையில் ரூ.13 ஆயிரத்துக்கு ரூ.500 நோட்டாகக் கிடந்துள்ளது.
அந்த பணத்தை எடுத்துச் சென்று திருவாரூா் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.