ஜூன் 24-இல் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்
திருவாரூரில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகள், திருநம்பி, இடைப்பாலினா் ஆகியோருக்கு திருநங்கைகள் நல வாரிய அடையாள அட்டை பெற பதிவு செய்தல், ஆதாா் அட்டையில் திருத்தங்கள் செய்ய, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைக்கு விண்ணப்பித்தல், ஆயுஷ்மான் பாரத் அட்டை மற்றும் வாக்காளா் அடையாள அட்டை ஆகியவை பெற்று வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஜூன் 24-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள், திருநம்பி, இடைப்பாலினா் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.