செய்திகள் :

தெருவோர மருந்தகங்கள்.. நாம் மறந்த மருத்துவச்செடிகளின் பலன்கள்!

post image

ருத்துவம் வளர்ச்சி அடையாத காலங்களில், நம் முன்னோர்கள் பல வகையான நோய்களை மூலிகைகளை வைத்தே குணப்படுத்திக் கொண்டனர். அந்தச் செடிகள் எல்லாம் சாதாரணமாக நம் வீட்டு கொல்லைப்புறங்களிலும், தெருவோரங்களிலுமே இருக்கின்றன. ஆனால், அதை ஏதோ களைச்செடி என நினைத்துக்கொண்டிருக்கிறோம். சித்த மருத்துவம் இன்றளவும், இந்த மூலிகைச்செடிகளை மருந்தாக்கி மக்களின் நோய்களைத் தீர்த்து வருகிறது. அந்த வகையில், நமக்குத் தெரிந்த செடிகள், அதன் தெரியாத மருத்துவ பயன்கள் பற்றி சித்த மருத்துவர் டாக்டர். விக்ரம் குமார் அவர்களிடம் பேசினோம்.

குப்பைமேனி

குப்பைமேனி
குப்பைமேனி

இதுதான் தோல் சார்ந்த நோய்களுக்கு சிறந்த மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அரிப்பு, படர்தாமரை போன்ற தோல் நோய்களுக்கு குப்பை மேனி உடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து தடவி வர குணமாகும். இதன் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கொதிக்க வைத்தும் பயன்படுத்தலாம்.

கீழாநெல்லி

கீழாநெல்லி
கீழாநெல்லி

பித்தம், அதாவது உடல் சூட்டைக் கட்டுப்படுத்தும். வெயில் காலங்களில் மோருடன் சிறிது கீழாநெல்லி இலை சேர்த்து அரைத்து பருகலாம். இது தொற்று நோய் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும், உடலில் தங்கும் அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி ஃபேட்டி லிவர் பிரச்னைக்கு நல்ல தீர்வாக அமைகிறது.

மணத்தக்காளி

மணத்தக்காளி
மணத்தக்காளி

கீரை, பழம் என இரண்டும் வாய்ப்புண், வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும். செரிமான கோளாறுகளை சரி செய்வதன் மூலம் மலச்சிக்கலை சரி செய்யும்.

இந்தக் கீரையை பருப்புடன் சேர்த்து வேக வைத்து நெய் சேர்த்து சாப்பிடுவது நன்மை பயக்கும். காய்ச்சல் வந்து சுவை தெரியாதவர்கள், அந்த நேரத்தில் மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்து சாப்பிடலாம். இது, நாக்கில் சுவை அரும்புகளைத் தூண்டி சுவையை உணரச் செய்யும்.

துத்தி இலை

துத்தி இலை
துத்தி இலை

மூலத்திற்கான சிறந்த மருந்து. பருப்புடன் சேர்த்து வேகவைத்து நெய் சேர்த்து சாப்பிட வேண்டும். செரிமான கோளாறுகளையும் சரி செய்கிறது. மஞ்சள் நிற பூக்கள் கொண்ட துத்திச்செடியை கண்டறிந்து பயன்படுத்த வேண்டும்.

கண்டங்கத்திரி

கண்டங்கத்திரி
கண்டங்கத்திரி

கண்டத்தில், அதாவது தொண்டையில் வரக்கூடிய நோய்களை கத்தரிக்கும் இயல்பு கொண்டது இது. ஜலதோஷம், காய்ச்சல் போன்ற பிரச்னைகளுக்கு கண்டங்கத்திரியை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். சித்த மருத்துவத்தில் கண்டங்கத்தரி லேகியம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மருதாணி

மருதாணி
மருதாணி

இலைகளை அரைத்து தலையில் தேய்த்துக் கொள்வதும், கைகளில் வைத்துக் கொள்வதும், உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும். கண் எரிச்சல் குறைக்கும் அருமருந்து. மருதாணி இலையுடன் சிறிது தேயிலைத்தூள் மற்றும் அவுரி இலையை கலந்து அரைத்து, தலையில் தேய்த்து வர இளநரை குறையும். பாலின பாகுபாடு இன்றி அனைவரும் கைகளில் மருதாணி வைத்துக் கொள்வது உடலுக்கு நல்லது.

கற்றாழை

கற்றாழை
கற்றாழை

குமரி கற்றாழை என்று அழைக்கக்கூடிய சோற்றுக்கற்றாழை, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு. கற்றாழையின் சதைப்பகுதியை எடுத்து 6 முதல் 7 முறை கழுவிவிட்டு மோர், உப்பு சேர்த்து அரைத்து ஜூஸ் போல குடித்து வர வாய்ப்புண், அல்சர் சரியாகும். உலகளவில் கற்றாழை அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. கற்றாழை சாறுடன் பால் கலந்து முகத்தில் தடவி வர, முகப்பருக்கள், கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

தும்பை

தும்பை
தும்பை

தும்பை இலை அல்லது பூவை குளிக்கும் நீரில் போட்டு குளித்துவந்தால் உடல் சோர்வு நீங்கும். தும்பைப் பூவை பிழிந்து அதிலிருந்து கிடைக்கும் சாற்றை நாசியில் விடுவதன் மூலம் சளி, இருமல் போன்ற பிரச்னைகள் குணமாகும். மேலும், பூவை கசக்கி முகப்பரு, கட்டிகள் மீது வைத்தால் அவை சரி ஆகும்.

ஆவாரம் பூ

ஆவாரம் பூ
ஆவாரம்பூ

நாம் உணவில் சேர்க்க மறக்கிற சுவையான துவர்ப்பு சுவையைக் கொண்டது இது. ஆவாரம் பூ கிடைக்கக்கூடிய காலங்களில் அனைவருமே அதை பறித்து சாப்பிடலாம். பூவை பறித்து தண்ணீரில் கொதிக்க வைத்து டீ போலவும் பருகலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்வது இன்சுலின் அளவை நெறிப்படுத்தும் என்கின்றன ஆய்வுகள்.

இவை எல்லாம் காலங்காலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகைகள் என்றாலும், மருந்தாக உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும்போது ஒரு சித்த மருத்துவரின் ஆலோசனைப்பெறுதல் அவசியம்.

Israel Vs Iran: ``Operation True Promise 3-இஸ்ரேலின் 6 இடங்களை குறிவைத்து தாக்கியிருக்கிறோம்"- ஈரான்

கடந்த சில நாள்களாக, 'ஈரானில் அணு ஆயுத தயாரிப்பு' என்ற பேச்சு அடிப்பட்டு வந்தது. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கிடையில் ஜூன் 12 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இர... மேலும் பார்க்க

``வரும் தேர்தலில் திருச்சியில் போட்டி; நடிகர் விஜய் மனசு..'' - திருநாவுக்கரசர் தடாலடி

ராகுல் காந்தி பிறந்த நாள்: வேலைவாய்ப்பு முகாம்நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி-யின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி மாநகர் மாவட்ட அலுவலகமான அருணாச... மேலும் பார்க்க

`திருமாவளவன் பேரணியில் ஹெலிகாப்டரில் பூ தூவ அனுமதி மறுப்பு' - காவல்துறை சொன்ன காரணம்

திருச்சி மாநகரில் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, 'மதசார்பின்மை காப்போம்' என்ற தலைப்பில் பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.டி.வி.எஸ் டோல்கேட் பக... மேலும் பார்க்க

Doctor Vikatan: இதயம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை அறிய ECG டெஸ்ட் மட்டுமே போதுமா?

Doctor Vikatan: ஒருவரின் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய இசிஜி டெஸ்ட் மட்டுமே போதுமானதா, ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பதை அதில் கண்டறிய முடியுமா, ஆஞ்சியோகிராம் பரிசோதனை யாருக்குத்தேவைப... மேலும் பார்க்க

``அடுத்தவர் சாப்பாட்டை எடுத்து மற்றவர்களுக்கு..'' -திமுக எம்எல்ஏ விமர்சனம்; கே.என்.நேருவின் பதில்

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நட... மேலும் பார்க்க

திருச்சி: ``ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது.." - தொல்.திருமாவளவன்

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"ஜூன் 14-ம் தேதியான நாளை மாலை 4 மணி அளவில் அண... மேலும் பார்க்க