`சைவம்... பதவி, புகழ் ஆகியவற்றில் அதிக விருப்பம் கொண்டவர்கள்’ - ஆய்வு முடிவு சொல்வதென்ன?
உணவுக்கும், நமக்கும் எப்போதுமே நெருங்கிய உறவு உண்டு. இதை ஆய்வுகள் கூட தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றன.
சமீபத்தில், இதே மாதிரியான ஆய்வு ஒன்று போலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 3,500 பேரிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் சைவ உணவை மட்டும் உண்பவர்கள் பதவி, புகழ், சமூக அந்தஸ்து ஆகியவற்றில் அதிக விருப்பம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசைவ உணவுப் பிரியர்கள் பாரம்பரியம், சமூக ரீதியாக ஏற்றுகொள்ளப்பட்ட விஷயங்களைப் பின்பற்றுவது, பிறரை வருத்தப்பட வைக்கக்கூடாது போன்றவற்றை டிக் செய்துள்ளனர். மேலும், அவர்கள் குடும்பம், குழந்தைகள், நண்பர்கள், பாதுகாப்பு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துபவர்களாக இருக்கின்றனர்.

இந்த ஆய்வை தலைமை தாங்கிய வார்சாவின் SWPS பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் நெஸ்லெக் கூறும்போது, 'ஆரோக்கியம், சுற்றுச்சூழல், விலங்குகளின் நலன் - இவை மூன்றும் தான் ஒருவர் சைவ உணவைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய காரணங்கள்.
இவைகளை வைத்துப் பார்க்கும்போது, சைவ உணவுப் பிரியர்கள் மிக அன்பானவர்களாக இருப்பார்கள் என்று பொதுவாக நாம் நினைப்போம். ஆனால், ஆய்வில் நாங்கள் கண்டுபிடித்ததோ முற்றிலும் வேறொன்று" என்று தெரிவித்துள்ளார்.
ஆய்வு எப்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது?
கற்பனைக் கதாபாத்திரத்தின் ஓவியம் ஒன்று ஆய்வில் கலந்துகொண்டவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 'இவருக்கு வெற்றி என்பது மிக முக்கியம், இவர் மற்றவர்களை ஈர்ப்பதில் விருப்பம் உள்ளவர்' என்று குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. மேலும், அந்தக் கதாபாத்திரத்திற்கும், ஆய்வில் கலந்துகொண்டவர்களுக்கும் எவ்வளவு ஒற்றுமை உண்டு என்பதை ஒன்றில் இருந்து ஆறு வரைக்கும் மதிப்பெண் கொடுக்க சொல்லியிருக்கிறார்கள். இப்படி தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது!
நீங்கள் சைவமா, அசைவமா? - கமென்ட் பண்ணுங்க!