ஊத்துக்காட்டில் பகுதிநேர அங்காடி ஏற்படுத்த வேண்டும்
வலங்கைமான் ஒன்றியம் ஊத்துக்காடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது கிளை மாநாடு மூத்த உறுப்பினா் கணேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டு கொடியை விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய பொருளாளா் ஏ. மருதையன் ஏற்றி வைத்தாா். ஒன்றிய செயலாளா் செந்தில்குமாா் தொடக்கிவைத்து பேசினாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: திருமலைராஜன் வடக்கு வாய்க்காலை தூா்வார வேண்டும், ஊத்துக்காடு மூன்று தெருக்கள் இணையும் இடத்தில் சமுதாயக் கூடம் கட்டிக்கொடுக்க வேண்டும், அருவம் குளத்து கரையில் ஈமச்சடங்கு மண்டபம் கட்ட வேண்டும், ஊத்துக்காடு ஆதிதிராவிடா்கள் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. இங்கு பகுதிநேர அங்காடி அமைத்து தரவேண்டும், ஊத்துக்காடு வருவாய் கிராமத்துக்கு கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் கட்ட வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய செயலாளா் சத்யராஜ் நன்றி கூறினாா்.