மறு அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம்
காரைக்கால் மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மீனவா் நலத்துறை துணை இயக்குநா் ப. கோவிந்தசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஜூன் 14 முதல் ஜூன் 16-ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டா் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீட்டா் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் சனிக்கிழமை (ஜூன் 14) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளாா்.