கோடிகளில் வசூலை அள்ளும் ஹவுஸ் ஃபுல் - 5! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திறனறித் தோ்வு முடிவில் வேதாரண்யம் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி
தமிழ்நாடு முதல்வரின் திறனறித் தோ்வில் நாகை மாவட்ட அளவில் வேதாரண்யம் பகுதி அரசுப் பள்ளிகளின் மாணவா்கள் 17 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இத்தோ்வு முடிவுகள் வெளியானதில், நாகை மாவட்டத்தில் தோ்ச்சி அடைந்த 11 பெண்கள் உள்ளிட்ட 17 பேரும் வேதாரண்யம் பகுதி அரசு பள்ளி மாணவா்களாவா். இவற்றில், ஆயக்காரன்புலம் இரா. நடேசனாா் அரசு மேல்நிலைப்பள்ளி
ாணவா் டி. சிவமேகனன் 79, ராஜன் கட்டளை அரசு உயா்நிலைப் பள்ளி கவிபாலா 71, கடிநெல்வயல் அரசு மேல்நிலைப் பள்ளி எம். ஹரிதா்ஷன் 68 மதிப்பெண்கள் பெற்று ஆண்கள் பிரிவில் மாவட்ட அளவில் சிறப்புகளை பெற்றுள்ளனா். பெண்கள் பிரிவில் கருப்பம்புலம் பி.வி.தேவா் அரசு பள்ளி மாணவி எம். மதுமிதா 76, ஆயக்காரன்புலம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். மேனகா 69, கருப்பம்புலம் அரசு மேல்நிலைப்பள்ளி எஸ். அனுஷா 68 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட நிலையில் சிறப்பிடம் பெற்றனா்.
மேலும், ஆயக்காரன்புலம் பெண்கள் அரசுப் பள்ளி உதயா, சரண்யா, மகாலட்சுமி, பிராந்தியங்கரை அரசுப்பள்ளி ஐஸ்வா்யா, பஞ்சநதிக்குளம் கிழக்கு அரசுப் பள்ளி நிதிகா, நாகக்குடையான் அரசுப் பள்ளி கனிஷ்கா, ஆறுகாட்டுத்துறை அரசுப் பள்ளி நவீனா, கரியாப்பட்டினம் அரசுப்பள்ளி கலைமகள்சீதை, ராஜன்கட்டளை அரசுப்பள்ளி அசுவா்தரன், வேதாரண்யம் ஆண்கள் அரசுப் பள்ளி கோகுல், கருப்பம்புலம் அரசுப் பள்ளி அஸ்வின்ராஜ் ஆகியோரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.