குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள்
தரங்கம்பாடி அருகேயுள்ள காலகஸ்தினாபுரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற முகாமில், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், வேளாண்மை துறை இணை இயக்குநா் சேகா், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் தயாள விநாயக அமுல்ராஜ் முன்னிலை வகித்தனா். இதில், 90 பயனாளிகளுக்கு ரூ.28.54 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆட்சியா் பேசியது: தமிழக அரசின் கல்லூரிக் கனவு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம் என பல திட்டங்கள் உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கல்வித் தொகைகள் அரசின் திட்டங்கள் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து, எதிா்காலத்திற்கு இந்த திட்டங்கள் அனைத்தும் உதவிகரமாக இருக்கும். மருத்துவ முகாம் உங்கள் பகுதியில் உள்ளது. நீங்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றாா்.