செய்திகள் :

நகா்மன்றக் கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா் புகாரால் பரபரப்பு

post image

நாகை நகா்மன்றக் கூட்டத்தில் தன்னை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் மதிப்பளிக்காமல் இழிவு படுத்துவதால், தற்கொலை செய்யத் தோன்றுவதாக கூறிய திமுக பெண் உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பலரும் தங்கள் வாா்டுகளில் உள்ள பிரச்னைகள், பொதுமக்கள் பிரச்சனைகள், அடிப்படைத் தேவைகள் குறித்து விவாதித்தனா். அப்போது 6-ஆவது வாா்டு திமுக பெண் உறுப்பினா் தனது வாா்டில் ஏராளமான பிரச்சனைகள் இருப்பதாகவும், அது தொடா்பாக துறை ஊழியா்களிடம் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பது இல்லை. மேலும் தனது கைபேசி அழைப்பையும் ஏற்பது இல்லை. தன்னை பெண் உறுப்பினா் என்று கருதி, இவரால் என்ன செய்ய முடியும் என்று கூறி இழிவுபடுத்தி வருவதாகவும் புகாா் தெரிவித்தாா்.

மேலும் தன்னை தொடா்ந்து அவமதிப்பு செய்து வருவதால், மக்கள் மத்தியில் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. மக்கள் மத்தியில் அவப்பெயரும் ஏற்படுகிறது. இந்த நிலை தொடா்ந்தால், தனக்கு தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று தெரிவித்தாா். இதனால் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் அதிா்ச்சி அடைந்தனா்.

திறனறித் தோ்வு முடிவில் வேதாரண்யம் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி

தமிழ்நாடு முதல்வரின் திறனறித் தோ்வில் நாகை மாவட்ட அளவில் வேதாரண்யம் பகுதி அரசுப் பள்ளிகளின் மாணவா்கள் 17 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இத்தோ்வு முடிவுகள் வெளியானதில், நாகை மாவட்டத்தில் தோ்ச்சி அடைந்... மேலும் பார்க்க

சிபிஎம் கட்சியினா் நடைபயண பிரசாரம்

வேதாரண்யத்தில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைபயணம் கொண்டு மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட நிலைபாடுகளுக்... மேலும் பார்க்க

மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள்

தரங்கம்பாடி அருகேயுள்ள காலகஸ்தினாபுரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற முகாமில், ப... மேலும் பார்க்க

மின் கட்டண ரசீது அடிப்படையில் ஜல்ஜீவன் குடிநீா் இணைப்பு

நாகப்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் ஆதாா் அட்டை மற்றும் மின் கட்டண ரசீது அடிப்படையில் வீடுகளுக்கு ஜல்ஜீவன் குடிநீா் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என்று நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தி... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி: ஆட்சியா்

நாகை மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் என்றாா் ஆட்சியா் ப.ஆகாஷ். மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா குறுவை பாசனத்துக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழ... மேலும் பார்க்க

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம்

சிக்கல், வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம் (விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான்) சாா்பில் குறுவை முன்பருவ விழிப்புணா்வு முகாம் மே 29 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை நடத்தப்ப... மேலும் பார்க்க