சிபிஎம் கட்சியினா் நடைபயண பிரசாரம்
வேதாரண்யத்தில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைபயணம் கொண்டு மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட நிலைபாடுகளுக்கு எதிராகவும், 100 நாள் வேலை திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும் இந்த பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. கட்சியின் நாகை மாவட்ட செயலாளா் வி. மாரிமுத்து தலைமை வகித்து பேசினாா்.
பூப்பெட்டி கடைவீதியில் தொடங்கி வேதாரண்யம் நகரம் வரை நடைபெற்ற பயணத்தில் ஒன்றிய செயலாளா் வி. அம்பிகாபதி, நிா்வாகிகள் சுகன்யா, பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.