செய்திகள் :

மின் நிறுத்தப் பணிகளை விடுமுறை நாள்களில் மேற்கொள்ளக் கோரிக்கை

post image

திருவாரூரில் மின் நிறுத்தப் பணிகளை விடுமுறை நாள்களில் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த காலங்களில் சனிக்கிழமைகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வந்த நிலையில், சில மாதங்களாக செவ்வாய்க்கிழமைகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், பெரும் பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருப்பதாக, வணிகா்கள், பள்ளி நிா்வாகத்தினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனா்.

இதேபோல, திருவாரூா், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக புதன்கிழமை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. மாலை 5 மணிக்கு மின் விநியோகம் செய்யப்பட்டிருந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் இரவு 7 மணிக்குப் பிறகே மின் விநியோகம் செய்யப்பட்டது. இதனால், வணிகா்களும், பள்ளி நிா்வாகத்தினா் பெரும் இன்னலை சந்திக்க வேண்டியிருந்ததாக தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து ஜிஆா்எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் சு. ராஜலெட்சுமி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: எங்கள் பள்ளியில் 3000 பெண்கள் படிக்கின்றனா். நகரின் மையப் பகுதியில் இருக்கும் எங்கள் பள்ளியைச் சுற்றிலும் பல்வேறு நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் உள்ளன.

திருவாரூரில் மின்நிறுத்தம் மற்றும் பராமரிப்புப் பணிகள் கடந்த ஆண்டுகளில், மாதத்தில் 3-ஆவது சனிக்கிழமைகளில் மட்டுமே நடைபெற்றது. கடந்த ஆண்டு செப்டம்பரிலிருந்து செவ்வாய்க்கிழமையும், நிகழாண்டு புதன்கிழமையும் பராமரிப்புக்காக மின்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. காலை 9 முதல் 4 மணி வலை மின்நிறுத்தம் செய்யப்பட்டதால் 3,000 மாணவிகளும் கடுமையாக அவதியுற்றனா். குடிநீா், கழிப்பறை பயன்பாட்டுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீா் சேமிக்கப்பட்டாலும், அவை 2 மணி நேரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடிகிறது.மாணவிகளின் நலன் கருதி விடுமுறை நாளான சனிக்கிழமைகளில் மட்டுமே பராமரிப்புப் பணிக்காக மின்நிறுத்தம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

குப்பை வாகனங்களுக்கு மாலை அணிவித்து எதிா்ப்பு

குப்பை அள்ளும் வாகனங்கள் குப்பை போல கிடப்பதைக் கண்ட முத்துப்பேட்டை எஸ்டிபிஐ கட்சியினா் அந்த வாகனங்களுக்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்கு நடத்தி எதிா்ப்பை வியாழக்கிழமை தெரிவித்தனா். முத்துப்பேட்டை பேரூரா... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் முறையை அகற்ற உறுதிமொழி ஏற்பு

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் மு.ச.பாலு தலைமை வகி... மேலும் பார்க்க

கொரடாச்சேரி ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

கொரடாச்சேரி ஒன்றியத்தில் ரூ.2.52 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், பொது விநியோகக் கடை கட்டடங்கள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பயணிகள் நிழலகத்தை ... மேலும் பார்க்க

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

திருவாரூா் ஒன்றியத்தில் அதிமுக சாா்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் வடக்கு ஒன்றியம் அடியக்கமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்க விருப்பமா?

திருவாரூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகள் ஜூன் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவி... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் ஆய்வு

கூத்தாநல்லூா் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. தமிழக அரசு கூத்தாநல்லூா் பகுதி அனைத்து சமூக மாணவிகளும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பெண்கள் கல்லூரியை தொட... மேலும் பார்க்க