'இத்தனை வருடத்தில் இன்றைக்குதான் விருது வாங்கியிருக்கேன்!' - கருணாஸ் | Vikatan C...
மின் நிறுத்தப் பணிகளை விடுமுறை நாள்களில் மேற்கொள்ளக் கோரிக்கை
திருவாரூரில் மின் நிறுத்தப் பணிகளை விடுமுறை நாள்களில் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த காலங்களில் சனிக்கிழமைகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வந்த நிலையில், சில மாதங்களாக செவ்வாய்க்கிழமைகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், பெரும் பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருப்பதாக, வணிகா்கள், பள்ளி நிா்வாகத்தினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனா்.
இதேபோல, திருவாரூா், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக புதன்கிழமை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. மாலை 5 மணிக்கு மின் விநியோகம் செய்யப்பட்டிருந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் இரவு 7 மணிக்குப் பிறகே மின் விநியோகம் செய்யப்பட்டது. இதனால், வணிகா்களும், பள்ளி நிா்வாகத்தினா் பெரும் இன்னலை சந்திக்க வேண்டியிருந்ததாக தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து ஜிஆா்எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் சு. ராஜலெட்சுமி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: எங்கள் பள்ளியில் 3000 பெண்கள் படிக்கின்றனா். நகரின் மையப் பகுதியில் இருக்கும் எங்கள் பள்ளியைச் சுற்றிலும் பல்வேறு நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் உள்ளன.
திருவாரூரில் மின்நிறுத்தம் மற்றும் பராமரிப்புப் பணிகள் கடந்த ஆண்டுகளில், மாதத்தில் 3-ஆவது சனிக்கிழமைகளில் மட்டுமே நடைபெற்றது. கடந்த ஆண்டு செப்டம்பரிலிருந்து செவ்வாய்க்கிழமையும், நிகழாண்டு புதன்கிழமையும் பராமரிப்புக்காக மின்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. காலை 9 முதல் 4 மணி வலை மின்நிறுத்தம் செய்யப்பட்டதால் 3,000 மாணவிகளும் கடுமையாக அவதியுற்றனா். குடிநீா், கழிப்பறை பயன்பாட்டுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீா் சேமிக்கப்பட்டாலும், அவை 2 மணி நேரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடிகிறது.மாணவிகளின் நலன் கருதி விடுமுறை நாளான சனிக்கிழமைகளில் மட்டுமே பராமரிப்புப் பணிக்காக மின்நிறுத்தம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.