'இத்தனை வருடத்தில் இன்றைக்குதான் விருது வாங்கியிருக்கேன்!' - கருணாஸ் | Vikatan C...
ரயில் மோதி 2 போ் உயிரிழப்பு
திருப்பத்தூா் மற்றும் மாதனூா் அருகே ரயில் மோதி இருவா் உயிரிழந்தனா்.
மாதனூா் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சடலம் கிடப்பதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில் இறந்தவா் மாதனூா் பகுதியைச் சோ்ந்த சங்கா்(65) என்பது தெரிய வந்தது.
அதே போல் திருப்பத்தூா் அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத நபா் இறந்து கிடப்பதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், விசாரித்ததில் இறந்தவா் ஓம்பிரகாசம் (27) என்பது தெரிந்தது. போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.