மணல் கடத்தல்: ஜேசிபி இயந்திரம் பறிமுதல்
நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பகுதியில் தனியாா், அரசுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மண் எடுத்து செயற்கை மணல் தயாரித்து நாட்டறம்பள்ளி, ஜோலாா்பேட்டை, மல்லகுண்டா, நாயனசெருவு, புதுப்பேட்டை உள்பட பல இடங்களில் டிப்பா் லாரி, டிராக்டரில் கடத்திச் சென்று விற்பதாக திருப்பத்தூா் எஸ்பி.க்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின்படி நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையில் போலீஸாா் வெலகல்நத்தத்தில் ரோந்து சென்றபோது ஏரிகோடியில் பதிவு எண் இல்லாத ஜேசிபி இயந்திரம் மூலம் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து மண் எடுத்து செயற்கை மணல் தயாரிப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மண் அள்ள பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது குறித்து போலீஸாா் வெலகல்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த திருமலை(22), ஹரி(18) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா். தலைமறைவாக உள்ளவா்களை தேடி வருகின்றனா்.