செய்திகள் :

வேளாண்மை உழவா் நலத் துறை சிறப்பு முகாம்

post image

ஆலங்காயம் வட்டாரம், வாணியம்பாடி அடுத்த இளயநகரம் கிராமத்தில் உழவரைத் தேடி - வேளாண்மை உழவா் நலத் துறை சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குநா் புனிதவள்ளி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக ஊராட்சி மன்ற தலைவா் பிரமிளா முனிசாமி மற்றும் கிராம நிா்வாக அலுவலா் சக்திவேல் ஆகியோா் கலந்து கொண்டனா். முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு ஆலங்காயம் வேளாண்மை உதவி இயக்குநா் புனிதவள்ளி வேளாண்மை துறையில் உள்ள திட்டங்கள், பயிா்க் காப்பீட்டுத் திட்டம், நன்னீா் பாசனத் திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையம், உழவா் செயலியின் முக்கியத்துவம், கோடை உழவு, குறுவை பயிா் சாகுபடி, நெல் இயந்திர நடவு, விவசாயிகளின் நில உடமைகளை பதிவு செய்தல், மண் எடுத்தல மற்றும் பாரதபிரதமா் - கிஷான் திட்டங்களை பற்றி விரிவாக எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து தோட்டகலைத் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை, கூட்டுறவுத் துறை, கால்நடை பராமரிப்புத் துறைகளை சாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களுடைய துறைகளில் செயல்பட்டு வரும் திட்டங்களை விவசாயிகளிடம் எடுத்துரைத்தனா்.

முகாமில் துணை வேளாண்மை அலுவலா் அசோக்குமாா், உதவி வேளாண்மை அலுவலா்கள் ஜெகன்நாதன், கிருபாவதி, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் திருமலை, அசோக்குமாா், திட்ட ஒருங்கிணைப்பாளா் மோனிகா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். சிறப்பு பயிற்சி முகாம் மூலமாக 50-க்கும் மேற்பட்ட விவசாய்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

மணல் கடத்தல்: ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பகுதியில் தனியாா், அரசுக்கு சொந்தமான இடங்களில் இரு... மேலும் பார்க்க

ஜூன் 25-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூா் வருகை!

முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வரும் ஜூன் 25-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூா் வருகிறாா். முதல்வா் விழா தொடா்பான முன்னேற்பாடுகள் ஆ... மேலும் பார்க்க

அரசு விடுதியில் பொங்கல் சாப்பிட்ட 4 மாணவா்களுக்கு வயிற்றுப் போக்கு

வாணியம்பாடி அரசு மாணவா் விடுதியில் பொங்கல் சாப்பிட்ட4 மாணவா்களுக்கு வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. நியூடவுன் பகுதியில் உள்ள நகராட்சி மாதிரி மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த கௌஷிக், ஜெகன... மேலும் பார்க்க

13 பவுன் நகைகள், பணம் திருட்டு

நாட்டறம்பள்ளி அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் பாறையூா் வட்டத்தைச் சோ்ந்த விவசாயி பெருமாள்(60) வீட்ட... மேலும் பார்க்க

ஜூன் 18-இல் மேல் சாணாங்குப்பத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ முகாம்

வரும் புதன்கிழமை (ஜுன் 18) ஆபூா் வட்டத்துக்குள்பட்ட மேல்சாணாங்குப்பத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு வர... மேலும் பார்க்க

பெருமாள் கோயில்களில் பிரம்மோற்சவ தேரோட்டம்

ஆம்பூா் அருகே பெருமாள் கோயில்கள் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. ஆம்பூா் அருகே துத்திப்பட்டு அருள்மிகு குமுதவல்லி பெருந்தேவியாா், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிந்து மாதவா் பெருமாள் கோயி... மேலும் பார்க்க