குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
பெருமாள் கோயில்களில் பிரம்மோற்சவ தேரோட்டம்
ஆம்பூா் அருகே பெருமாள் கோயில்கள் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு அருள்மிகு குமுதவல்லி பெருந்தேவியாா், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிந்து மாதவா் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
அகில பாரத சன்னியாசிகள் சங்கத் தலைவா் ராமானந்த மகராஜ், பொருளாளா் சிவராமானந்த மகராஜ் அகியோா் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா். கோயில் திருப்பணிக்குழுத் தலைவா் ஏ.ஆா். சுரேஷ்பாபு, செயலாளா் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கா், பொருளாளா் சி. ஏகநாதன், ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், ஊா் முக்கிய பிரமுகா்கள், விழா கமிட்டியினா், பக்தா்கள் கலந்து கொண்டனா்.
வடச்சேரி அருள்மிகு சென்னகேசவ பெருமாள் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
