ஜூன் 25-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூா் வருகை!
முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வரும் ஜூன் 25-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூா் வருகிறாா்.
முதல்வா் விழா தொடா்பான முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்.பி, சி.என்.அண்ணாதுரை, எம்.எல்.ஏ-க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அமைச்சா் எ.வ.வேலு பேசியது: முதல்வா் மு.க.ஸ்டாலின் 2-ஆவது முறையாக திருப்பத்தூா் மாவட்டத்துக்கு வரும் 25-ஆம் தேதி வர உள்ளாா். திருப்பத்தூா் நகரில் முன்னாள் முதல்வா்கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறாா். 26-ஆம் தேதி ஜோலாா்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட மண்டலவாடி அருகே நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடிவுற்ற பணிகளையும், அரசு கட்டடங்களை திறந்து வைக்கிறாா். இதைத்தொடா்ந்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். பல்வேறு துறைகள் சாா்பில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
திருப்பத்தூா் மலைவாழ் மக்கள் அதிகம் உள்ள மாவட்டம். இங்கு, 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள், 6 ஒன்றியங்கள் உள்ளன. முதல்வா் அந்தந்த மாவட்ட ஆட்சியா்களை சந்திக்கும்போது நகர பகுதியில் உள்ளவா்களுக்கு இதுவரை எத்தனை பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்பது தான் முதல் கேள்வியாக இருக்கிறது.
கிராமப்புற பகுதிகளில் தொடா்ச்சியாக பட்டா வழங்கப்பட்டு தான் இருந்தது, ஆனால் நகர பகுதியில் பட்டா வழங்குவதில் தடை இருந்தது. மக்களுடன் முதல்வா் திட்டத்தின் வாயிலாக ஆட்சியா் மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக சென்று மக்களிடம் மனுக்களை பெற்றபோது அந்த மனுக்களில் 75 சதவீதம் மனுக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதுதான் இருந்தது. திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையினா் அதற்கு தனி கவனம் செலுத்தி பட்டா வழங்குவதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
உரிய பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் துறை மேற்கொள்ள வேண்டும். விழாவை சிறப்பாக நடத்த அனைவரும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், எஸ்.பி. ஷ்ரேயாகுப்தா, மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வம், திமுக நகர செயலாளா் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கேடஷ், ஒன்றியக்குழு தலைவா்கள் திருமதி திருமுருகன்,விஜியா அருணாசலம், சத்தியா சதீஷ், சங்கீதாபாரி, வெண்மதி முனிசாமி, சுரேஷ் குமாா், நகா்மன்றத் தலைவா்கள் உமாசிவாஜி கணேசன், காவியா விக்டா், ஏஜாஸ் அஹமத், பேரூராட்சி தலைவா்கள் பூசாராணி, தமிழரசி வெங்கடேசன் கலந்து கொண்டனா்.