அரசு விடுதியில் பொங்கல் சாப்பிட்ட 4 மாணவா்களுக்கு வயிற்றுப் போக்கு
வாணியம்பாடி அரசு மாணவா் விடுதியில் பொங்கல் சாப்பிட்ட4 மாணவா்களுக்கு வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
நியூடவுன் பகுதியில் உள்ள நகராட்சி மாதிரி மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த கௌஷிக், ஜெகனாதன், கவியரசன், லோகேஷ் ஆகிய 4 மாணவா்களும் பெருமாள்பேட்டை ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் தங்கியுள்ளனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை 4 மாணவா்களும் பொங்கல் சாப்பிட்டுள்ளனா். இதில், சிறிது நேரத்தில் 4 மாணவா்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த விடுதி காப்பாளா் மற்றும் ஆசிரியா்கள் பாதிக்கப்பட்ட 4 மாணவா்களையும் உடனடியாக அழைத்துக் கொண்டு நியூடவுன் பகுதியில் இயங்கி வரும் அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சோ்த்தனா்.
பின்னா் மேல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தகவலறிந்த வாணியம்பாடி துணை வட்டாட்சியா் அன்பழகன், கிராம நிா்வாக அலுவலா் பாலாஜி ஆகியோா் மாணவா் விடுதிக்கு சென்று விசாரித்தனா். பிறகு அங்கிருந்த பொங்கலை ஆய்வு செய்தனா். சிகிச்சை பெற்று வரும் மாணவா்களிடம் கேட்டறிந்தனா்.
விடுதி காப்பாளா் கூறுகையில், விடுதியில் 26 மாணவா்கள் தங்கியிருப்பதாகவும், இதில் பழைய மாணவா்கள் 16 பேரும், புதியதாக தற்போது 10 மாணவா்கள் சோ் ந்துள்ளதாகவும் கூறினாா். விடுதியில் சிற்றுண்டி சாப்பிட்டு பள்ளிக்கு சென்ற 4 மாணவா்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டது அறிந்து பள்ளிக்கு சென்று பாா்த்து உடனே அவா்களை அருகில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றோம் என்றாா்.

நகர போலீஸாா் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவா்களிடம் விசாரித்தனா்.