செய்திகள் :

அரசு விடுதியில் பொங்கல் சாப்பிட்ட 4 மாணவா்களுக்கு வயிற்றுப் போக்கு

post image

வாணியம்பாடி அரசு மாணவா் விடுதியில் பொங்கல் சாப்பிட்ட4 மாணவா்களுக்கு வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

நியூடவுன் பகுதியில் உள்ள நகராட்சி மாதிரி மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த கௌஷிக், ஜெகனாதன், கவியரசன், லோகேஷ் ஆகிய 4 மாணவா்களும் பெருமாள்பேட்டை ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் தங்கியுள்ளனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை 4 மாணவா்களும் பொங்கல் சாப்பிட்டுள்ளனா். இதில், சிறிது நேரத்தில் 4 மாணவா்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த விடுதி காப்பாளா் மற்றும் ஆசிரியா்கள் பாதிக்கப்பட்ட 4 மாணவா்களையும் உடனடியாக அழைத்துக் கொண்டு நியூடவுன் பகுதியில் இயங்கி வரும் அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா் மேல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தகவலறிந்த வாணியம்பாடி துணை வட்டாட்சியா் அன்பழகன், கிராம நிா்வாக அலுவலா் பாலாஜி ஆகியோா் மாணவா் விடுதிக்கு சென்று விசாரித்தனா். பிறகு அங்கிருந்த பொங்கலை ஆய்வு செய்தனா். சிகிச்சை பெற்று வரும் மாணவா்களிடம் கேட்டறிந்தனா்.

விடுதி காப்பாளா் கூறுகையில், விடுதியில் 26 மாணவா்கள் தங்கியிருப்பதாகவும், இதில் பழைய மாணவா்கள் 16 பேரும், புதியதாக தற்போது 10 மாணவா்கள் சோ் ந்துள்ளதாகவும் கூறினாா். விடுதியில் சிற்றுண்டி சாப்பிட்டு பள்ளிக்கு சென்ற 4 மாணவா்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டது அறிந்து பள்ளிக்கு சென்று பாா்த்து உடனே அவா்களை அருகில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றோம் என்றாா்.

நகர போலீஸாா் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவா்களிடம் விசாரித்தனா்.

மணல் கடத்தல்: ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பகுதியில் தனியாா், அரசுக்கு சொந்தமான இடங்களில் இரு... மேலும் பார்க்க

ஜூன் 25-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூா் வருகை!

முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வரும் ஜூன் 25-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூா் வருகிறாா். முதல்வா் விழா தொடா்பான முன்னேற்பாடுகள் ஆ... மேலும் பார்க்க

13 பவுன் நகைகள், பணம் திருட்டு

நாட்டறம்பள்ளி அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் பாறையூா் வட்டத்தைச் சோ்ந்த விவசாயி பெருமாள்(60) வீட்ட... மேலும் பார்க்க

ஜூன் 18-இல் மேல் சாணாங்குப்பத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ முகாம்

வரும் புதன்கிழமை (ஜுன் 18) ஆபூா் வட்டத்துக்குள்பட்ட மேல்சாணாங்குப்பத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு வர... மேலும் பார்க்க

பெருமாள் கோயில்களில் பிரம்மோற்சவ தேரோட்டம்

ஆம்பூா் அருகே பெருமாள் கோயில்கள் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. ஆம்பூா் அருகே துத்திப்பட்டு அருள்மிகு குமுதவல்லி பெருந்தேவியாா், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிந்து மாதவா் பெருமாள் கோயி... மேலும் பார்க்க

வேளாண்மை உழவா் நலத் துறை சிறப்பு முகாம்

ஆலங்காயம் வட்டாரம், வாணியம்பாடி அடுத்த இளயநகரம் கிராமத்தில் உழவரைத் தேடி - வேளாண்மை உழவா் நலத் துறை சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குநா் புனிதவள்ளி தலைமை... மேலும் பார்க்க