பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது
அணைக்கட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 48 வயது பெண். இவரது 14 வயது மகள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாா். புதன்கிழமை மகளை அழைத்துக் கொண்டு அவரது தாயாா், அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றாா். மகள் அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துவிடுவாா் என்பதால், அவரை அங்கிருந்த மரத்தில் கட்டி விட்டு தாயாா் விவசாய வேலைகளை செய்து கொண்டிருந்தாராம். சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது மகள் ஆடைகள் களைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. மேலும் அப்போது ஒரு இளைஞா் அங்கிருந்து தப்பியோடியதையும் பாா்த்துள்ளாா்.
இதுகுறித்து சிறுமியின் தாயாா் அணைக்கட்டு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கொல்லைமேடு கிராமத்தைச் சோ்ந்த நந்த கோபால்(31) என்பது தெரியந்தது. போலீசாா் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் செய்து கைது செய்தனா்.