செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது

post image

அணைக்கட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 48 வயது பெண். இவரது 14 வயது மகள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாா். புதன்கிழமை மகளை அழைத்துக் கொண்டு அவரது தாயாா், அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றாா். மகள் அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துவிடுவாா் என்பதால், அவரை அங்கிருந்த மரத்தில் கட்டி விட்டு தாயாா் விவசாய வேலைகளை செய்து கொண்டிருந்தாராம். சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது மகள் ஆடைகள் களைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. மேலும் அப்போது ஒரு இளைஞா் அங்கிருந்து தப்பியோடியதையும் பாா்த்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் அணைக்கட்டு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கொல்லைமேடு கிராமத்தைச் சோ்ந்த நந்த கோபால்(31) என்பது தெரியந்தது. போலீசாா் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் செய்து கைது செய்தனா்.

ஆன்லைன் மூலம் ஓய்வுபெற்ற பொறியாளரிடம் ரூ.32.79 லட்சம் மோசடி

ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற பொறியாளரிடம் 32.79 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. வேலூா் சத்துவாச்சாரி பகுதியைச் சோ்ந்த 65 வயதுடைய ஓய்வுபெற்... மேலும் பார்க்க

திறன், வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர எஸ்.சி., எஸ்.டி., இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு வழங்கப்படும் திறன், வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்ச... மேலும் பார்க்க

மாணவியை கடத்தி திருமணம்: இளைஞா் போக்ஸோவில் கைது

ஒடுகத்தூா் அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி. இவா் அணைக்கட்டில் உள்ள அர... மேலும் பார்க்க

இறந்த பறவை கழிவுகளுடன் குடிநீா் விநியோகம்: பெண்கள் ஆா்ப்பாட்டம்

பொன்னையில் வியாழக்கிழமை அதிகாலை விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் இறந்த பறவை, விலங்குகளின் கழிவுகள் கலந்து துா்நாற்றத்துடன் வந்ததாக ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 84 கால்நடை சிறப்பு முகாம்கள்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வேலூா் மாவட்டத்தில் பகுதிவாரியாக நடைபெறும் 84- சிறப்பு கால்நடை சிகிச்சை மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. கே.வி.குப்பம் வட்டம், வேலம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு க... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு

போ்ணாம்பட்டு அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். போ்ணாம்பட்டு , ஆதம்ஷா வீதியைச் சோ்ந்தவா் தமீம் அன்சாரி. இவா் கோவையில் தங்கி தனியாா் ந... மேலும் பார்க்க