செய்திகள் :

விமான விபத்து எதிரொலி: பாஜக, காங்கிரஸ் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

post image

குஜராத் விமான விபத்தில் 265 போ் உயிரிழந்த சோக நிகழ்வை அடுத்து பாஜக, காங்கிரஸ் சமாஜவாதி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த பல்வேறு நிகழ்சிகளை ரத்து செய்துள்ளன.

பிரதமா் நரேந்திர மோடியும் வெள்ளிக்கிழமை தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு குஜராத் சென்று சம்பவ இடத்தைப் பாா்வையிட்டதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

இது தொடா்பாக உத்தர பிரதேச பாஜக தலைவா் புபேந்திர சிங் செளதரி கூறுகையில், ‘அகமதாபாத் விமான விபத்து சோக நிகழ்வு காரணமாக, சனிக்கிழமை (ஜூன் 13) நடத்த திட்டமிடப்பட்டிருந்த பாஜக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் வெள்ளிக்கிழமை மாலை முதலே திட்டமிட்டிருந்த தனது பொது நிகழ்ச்சிகள் அனைத்தையும் முதல்வா் யோகி ஆதித்யநாத் ரத்து செய்துவிட்டாா்’ என்றாா்.

இதேபோல காங்கிரஸ் கட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து பொது நிகழ்ச்சிகளும் இரு நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டன.

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் மூன்று நாள்களுக்கு ஒத்திவைப்பதாக சமாஜவாதி கட்சி அறிவித்துள்ளது.

ஒடிசாவில் காலராவுக்கு 11 பேர் பலி! அரசு விடுமுறைகள் ரத்து!

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் காலரா தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. ஜாஜ்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், காலரா தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. புதிய பாதிப... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! உயிர்த் தப்பிய விடுதி மாணவர்கள் கலக்கம்!

அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்ட விடுதியில் இருந்த மாணவர்கள் வெளியேறி வருகின்றனர்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான மருத்துவ விடுதி மாணவர்களுக்கும் இழப்பீடு வழங்குமாறு இந்திய மருத்து... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து விசாரணைக்கு 3 மாத கால அவகாசம்! மத்திய அமைச்சர் உறுதி!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தை விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து ஆய்வு செய்த விமானப் போக்... மேலும் பார்க்க

ஒடிசா: நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலில் இந்திய வீரர் பலி!

ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கார் மாவட்டத்தில், நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதல்களில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். சுந்தர்கார் மாவட்டத்தின் ரௌர்கெலா பகுதியிலுள்ள, கே பாலங் கிராமத... மேலும் பார்க்க

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது

நாடு முழுவதும் கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கைக்கு அடிப்படையாக இருக்கும் நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது.நாட... மேலும் பார்க்க

டிரம்ப் எச்சரிக்கையை இந்தியா முறியடிப்பு? ஐபோன் உற்பத்தியில் மைல்கல்!

இந்தியாவில் கடந்தாண்டு ஐபோன் உற்பத்தியை, நிகழாண்டு முதல் 5 மாதங்களிலேயே தாண்டியது.அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மட்டுமே அமெரிக்காவில் விற்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ... மேலும் பார்க்க