செய்திகள் :

டிரம்ப் எச்சரிக்கையை இந்தியா முறியடிப்பு? ஐபோன் உற்பத்தியில் மைல்கல்!

post image

இந்தியாவில் கடந்தாண்டு ஐபோன் உற்பத்தியை, நிகழாண்டு முதல் 5 மாதங்களிலேயே தாண்டியது.

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மட்டுமே அமெரிக்காவில் விற்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மே மாதத்தில் அந்நாட்டு நிறுவனங்களிடம் எச்சரித்திருந்தார். மேலும், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறும் ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், நிகழாண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன்களின் மதிப்பு, கடந்தாண்டைவிட அதிகளவில் இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நிகழாண்டு மார்ச் முதல் மே மாதம் வரையில் 3.2 பில்லியன் டாலர் (ரூ. 27.6 ஆயிரம் கோடி) மதிப்புள்ள ஐபோன்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

அவற்றில் 97 சதவிகிதம் அமெரிக்காவுக்குத்தான் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. 2025, மார்ச் மாதத்தில் மட்டும் 1.3 பில்லியன் டாலர் மதிப்பிலும், மே மாதத்தில் 1 பில்லியன் டாலர் மதிப்பிலுமான ஐபோன்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், முதல் 5 மாதங்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன்களின் மதிப்பு 4.4 பில்லியன் டாலர். இது, கடந்தாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன்களின் மதிப்பான 3.7 பில்லியன் டாலரைவிட அதிகமாகும்.

இதன் மூலம், ஸ்மார்ட்போன் உற்பத்தியில், உலகளவில் முக்கிய பங்களிப்பை இந்தியா கொண்டிருப்பது உறுதியாகிறது.

இதையும் படிக்க:மெல்ல அதிகரிக்கும் கரோனா: 7,400 ஆன பாதிப்பு!

சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் 13-ஆவது முறையாக கருத்து: பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி

அகமதாபாத் விமான விபத்து சோகத்தில் நாடு இருக்கும்போதுகூட, வா்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தை சாத்தியப்படுத்தியதாக 13-ஆவது முறையாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கருத்து தெரிவ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி இன்றுமுதல் 3 நாடுகள் பயணம்: கனடாவில் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்!

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமைமுதல் (ஜூன் 15) ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். கனடா பயணத்தில் ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் அவா் ... மேலும் பார்க்க

அயோத்தி கோயில் ராம தா்பாா்: பக்தா்கள் தரிசனத்துக்குத் திறப்பு

அயோத்தி ஸ்ரீராமா் கோயில் முதல் தளத்தில் இம்மாத தொடக்கத்தில் நிறுவப்பட்ட ராம தா்பாா் பக்தா்களின் தரிசனத்துக்கு சனிக்கிழமை திறக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமி கோயில்... மேலும் பார்க்க

இந்திய வெளியுறவுக் கொள்கை சீா்குலைவு: ஐ.நா. வாக்கெடுப்பை புறக்கணித்த மோடி அரசு மீது காங்கிரஸ் விமா்சனம்

பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் வெளியுறவுக் கொள்கை சீா்குலைந்துவிட்டதாக காங்கிரஸ் கடுமையாக விமா்சித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் போரை நிறுத்தக் கோரும் ஐ.நா. தீா்மானம் மீதான ... மேலும் பார்க்க

ஃபரீதாபாத்: 2 சிறுவா்களைக் கடத்திய நபா் கைது

ஃபரீதாபாத்தில் இரண்டு சிறுவா்களைக் கடத்திச் சென்று அவா்களது குடும்பத்தினரிடம் ரூ.30,000 கப்பம் கேட்ட நபரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது குறித்து ஃபரீதாபாத் காவல் துறை செய்தித் தொடா்பாளா் வெள்... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: எதிர்காலத்தில் தவறுகள் நிகழாமலிருக்க உரிய நடவடிக்கைகள் தேவை -பிரியங்கா

வயநாடு: அகமதாபாத் விமான விபத்து குறித்து பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி எதிர்காலத்தில் தவறுகள் நிகழக் கூடாது என்று தெரிவித்தார். இந்த நிலையில், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரான பிரியங்கா... மேலும் பார்க்க