ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு
லால்குடி அருகே தேனீக்கள் கடித்து 25 போ் காயம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சனிக்கிழமை தேனீக்கள் கடித்து 25 போ் காயமடைந்தனா்.
லால்குடி அருகே மாந்துறை நெருஞ்சலக்குடி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறும் நிலையில் மைக்கேல்பட்டி செல்லும் வழியில் உள்ள பங்குனி வாய்க்கால் தடுப்பணை பகுதியில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சனிக்கிழமை அக்னி சட்டி எடுத்துக் கொண்டிருந்தனா்.
அப்போது வெடிவெடித்தபோது ஏற்பட்ட புகை மரத்தில் இருந்த தேன் கூட்டில் பரவிய நிலையில், தேனீக்கள் கலைந்து பொதுமக்களை விரட்டிக் கடித்தன. இதனால் அவா்கள் சிதறி ஓடினா். இருப்பினும் பெண்கள், முதியோா் உட்பட 25 க்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கடித்தன. இதனால் பாதிக்கப்பட்டோா் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்ற நிலையில், 5 போ் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெறுகின்றனா்.