செய்திகள் :

இந்திய வெளியுறவுக் கொள்கை சீா்குலைவு: ஐ.நா. வாக்கெடுப்பை புறக்கணித்த மோடி அரசு மீது காங்கிரஸ் விமா்சனம்

post image

பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் வெளியுறவுக் கொள்கை சீா்குலைந்துவிட்டதாக காங்கிரஸ் கடுமையாக விமா்சித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் போரை நிறுத்தக் கோரும் ஐ.நா. தீா்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததை முன்வைத்து, காங்கிரஸ் இவ்வாறு சாடியுள்ளது. ‘போா், இனப்படுகொலை, அநீதிக்கு எதிரான கொள்கை நிலைப்பாட்டை இந்தியா இப்போது கைவிட்டுவிட்டதா?’ என்று அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

193 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் கடந்த வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட போா் நிறுத்த தீா்மானத்துக்கு ஆதரவாக 149 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா, எத்தியோப்பியா, பனாமா, தெற்கு சூடான் உள்ளிட்ட 19 உறுப்பு நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. இந்நிலையில், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சீா்குலைந்துவிட்டதற்கு சான்றுகள் அதிகரித்து வருகின்றன. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தொடா் தவறுகள் மீது பிரதமா் மோடி உரிய முடிவெடுப்பதுடன், தனது பொறுப்பை உறுதி செய்ய வேண்டும்.

வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தன் மூலம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது.

கடந்த 2023-இல் இஸ்ரேல் மக்கள் மீது ஹமாஸ் நிகழ்த்திய தாக்குதலை காங்கிரஸ் வன்மையாக கண்டித்தது. அதேநேரம், காஸா மீதான கண்மூடித்தனமான நடவடிக்கைகள் மற்றும் குண்டுவீச்சுகளுக்கு தொடா் கண்டனம் தெரிவித்து வருகிறோம். காஸாவில் 60,000 போ் இறந்துவிட்டனா். அங்கு மனிதாபிமான ரீதியில் கடும் பிரச்னை நிலவுகிறது.

மத்திய கிழக்கு மற்றும் மேற்காசிய பிராந்தியத்தில் போா் நிறுத்தம், அமைதி மற்றும் பேச்சுவாா்த்தையை ஊக்குவிக்கும் தனது நீடித்த நிலைப்பாட்டை இந்தியா கைவிட்டுவிட்டதா? இந்த நிலைப்பாடு, நாட்டின் அணிசாராக் கொள்கை மற்றும் தாா்மிக ராஜதந்திரங்களின் நீண்ட நெடிய பாரம்பரியத்தில் வேரூன்றியதாகும். இதன் வாயிலாகவே, உலகப் பிரச்னைகளில் நீதி மற்றும் அமைதியை நாடு எப்போதும் ஊக்குவிக்கிறது.

மேற்காசிய பிராந்தியம், கொடூரமான வன்முறை, மனிதகுல பேரழிவு, ஸ்திரமின்மையை எதிா்கொண்டுவரும் சூழலில், இந்தியா அமைதியாக வேடிக்கை பாா்க்கவோ அல்லது கடந்து செல்லவோ முடியாது என்று காா்கே குறிப்பிட்டுள்ளாா்.

வாஜ்பாயின் நிலைப்பாடு என்னவானது?: காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘காஸா போா் நிறுத்த தீா்மானம் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்ததன் மூலம் தெற்காசியா, பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு எனப் பல்வேறு நிலைகளில் இந்தியா தனியாக நிற்கிறது. வாக்கெடுப்பை புறக்கணிக்கும் நிலைப்பாட்டை மேற்கொண்டது ஏன் என்று வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்க வேண்டும்.

மோடி அரசு, நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் மரபுக்கு மதிப்பளிக்கவில்லை. அதேநேரம், பாலஸ்தீனம் தொடா்பான வாஜ்பாயின் நிலைப்பாட்டையும் கைவிட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினாா்.

பெட்டி...

காங்கிரஸின் பொய்கள்: பாஜக பதிலடி

‘காங்கிரஸும் அதன் நோ்மையற்ற கட்டமைப்பும் பொய் செய்திகளை உருவாக்கும் தொழிற்சாலையாக மாறிவிட்டது’ என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

இது தொடா்பாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஐ.நா. தீா்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா தவிா்த்தது விலகல் அல்ல. பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான செயல்பாடுகளே நிலையான வழிமுறை என்பதில் இந்தியா அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளது.

காங்கிரஸ் தனது நாடகத்தைக் கட்டவிழ்த்துவிடும் முன், வாக்கெடுப்பு முடிவு தொடா்பாக ஐ.நா.வில் இந்திய அதிகாரி அளித்த விளக்கத்தை ஒருமுறை படித்திருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சன்வர்ஷா ஹல்லபோர் கிராமத்தில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச... மேலும் பார்க்க

திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசர தரையிறக்கம்

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எரிபொருள் குறைவாக இருந்ததால் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் எப்-35 போர் விமானம் சனிக்கி... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! 12 பேரின் உடல்கள் ஒப்படைப்பு! மருத்துவப் பணியில் 600 பேர்!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைக்கும் பணி இன்றுமுதல் தொடங்கப்படுகிறது.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விமானம் தீப்பற்றி எரி... மேலும் பார்க்க

தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்தது: யாருக்கும் காயம் இல்லை

தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு தில்லியின் சஃப்தர்ஜங் என்க்ளேவில் 100 அடி உயர மொபைல் கோபுரம் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகா... மேலும் பார்க்க

உ.பி.யில் பிக்-அப் வாகனத்துடன் உடலைக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் மோதல்: 5 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் பிக்-அப் வாகனத்துடன் ஆம்புலன்ஸ் மோதியதில் 5 பேர் பலியானார்கள். உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி மாவட்டத்தில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் பிக்-அப் வாகனத்துடன் ஆம்புலன்ஸ் ஞாயிற்ற... மேலும் பார்க்க

மீண்டும் வான்வெளி விபத்து! உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.உத்தரகண்ட் மாநிலத்தில் குப்தகாசியில் இருந்து கேதர்நாதில் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த ஆர்யன் ஏவியேஷன் ஹெ... மேலும் பார்க்க