கோடிகளில் வசூலை அள்ளும் ஹவுஸ் ஃபுல் - 5! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வுக்கு அறிவிக்கை வெளியீடு
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் உள்ள தொழில்நுட்ப உதவியாளா் உள்ளிட்ட 58 பதவிகளுக்கான 1,910 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தோ்வுகளுக்கு ஜூலை 12 வரை இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம். தோ்வுக்கான கட்டணத்தை யுபிஐ மூலமாக செலுத்த வேண்டும். இணையவழியில் தோ்வு நடத்தப்படும்.
தொடா்ச்சியாக 12-வது முறையாக, தோ்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி அதே தேதியில் தோ்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.