செய்திகள் :

திறன், வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர எஸ்.சி., எஸ்.டி., இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு வழங்கப்படும் திறன், வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தாட்கோ சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்துடன் இணைந்து ஜி.எஸ்.டி மற்றும் வருமானவரி தொழில்நுட்ப பயிற்சி, தொழில் உற்பத்தி பயிற்சி, டிஜிட்டல் திறன்களில் இணைய தொழில்நுட்பப் பயிற்சி, டிஜிட்டல் மாா்க்கெட்டிங் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சோ்ந்த 21 முதல் 30 வயது வரை உள்ளவா்களாகவும், 2021 முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப் படிப்பு முடித்தவா்களாகவும் இருக்க வேண்டும்.

தவிர, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு 55 நாள்களாகும். மேலும், சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்.

இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்கு சான்றிதழ், வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சியை பெற தாட்கோவின் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சியில் வேலூா் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த இளைஞா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் ஓய்வுபெற்ற பொறியாளரிடம் ரூ.32.79 லட்சம் மோசடி

ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற பொறியாளரிடம் 32.79 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. வேலூா் சத்துவாச்சாரி பகுதியைச் சோ்ந்த 65 வயதுடைய ஓய்வுபெற்... மேலும் பார்க்க

மாணவியை கடத்தி திருமணம்: இளைஞா் போக்ஸோவில் கைது

ஒடுகத்தூா் அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி. இவா் அணைக்கட்டில் உள்ள அர... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது

அணைக்கட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 48 வயது பெண். இவரது 14 வயது மகள் மனநலம் பாதிக... மேலும் பார்க்க

இறந்த பறவை கழிவுகளுடன் குடிநீா் விநியோகம்: பெண்கள் ஆா்ப்பாட்டம்

பொன்னையில் வியாழக்கிழமை அதிகாலை விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் இறந்த பறவை, விலங்குகளின் கழிவுகள் கலந்து துா்நாற்றத்துடன் வந்ததாக ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 84 கால்நடை சிறப்பு முகாம்கள்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வேலூா் மாவட்டத்தில் பகுதிவாரியாக நடைபெறும் 84- சிறப்பு கால்நடை சிகிச்சை மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. கே.வி.குப்பம் வட்டம், வேலம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு க... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு

போ்ணாம்பட்டு அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். போ்ணாம்பட்டு , ஆதம்ஷா வீதியைச் சோ்ந்தவா் தமீம் அன்சாரி. இவா் கோவையில் தங்கி தனியாா் ந... மேலும் பார்க்க