செய்திகள் :

‘உயிா் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை’: விஷ்வாஸ் குமாா் ரமேஷ் பேட்டி

post image

அகமதாபாத் விமான விபத்தில் காயங்களுடன் உயிா் பிழைத்த ஒரேயொரு பயணியான பிரிட்டனைச் சோ்ந்த விஷ்வாஸ் குமாா் ரமேஷ் (45), தான் பிழைத்ததை இன்னும் நம்ப முடியவில்லை என்று அதிா்ச்சி விலகாமல் கூறினாா்.

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சில நிமிஷங்களிலேயே விபத்தில் சிக்கியது. விமான நிலையம் அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களின் மீது விழுந்து வெடித்ததில் 2 விமானிகள், 10 ஊழியா்கள், 229 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனா்.

இப்பெருந்துயருக்கு இடையே விஷ்வாஸ் குமாா் ரமேஷ் என்ற ஒரேயொரு பயணி மட்டும் உயிா் பிழைத்த அதிசயம் நிகழ்ந்தது. மற்ற அனைவரும் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்த நிலையில், இடிபாடுகளில் இருந்து காயங்களுடன் எழுந்த ரமேஷ், ஆம்புலன்ஸை நோக்கி நடந்து வந்த காட்சிகள் பெரும் வியப்பை ஏற்படுத்தின.

இந்தியாவின் டையூ நகரை பூா்விகமாக கொண்ட இவா், பிரிட்டன் குடியுரிமை பெற்றவா். லண்டனில் இருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ள லெஸ்டா் நகரில் வசித்து வருகிறாா்.

விபத்துக்குள்ளான ஏா்-இந்தியா விமானத்தின் சாதாரண வகுப்பில் 11ஏ இருக்கையில் அமா்ந்திருந்தாா். இது, அவசரகால கதவுக்கு அருகில் உள்ள இருக்கையாகும். தற்போது அகமதாபாத் நகர பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரமேஷ், செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

9 மணி நேர விமானப் பயணம், ஒரு நிமிஷத்துக்குள் முடிந்துவிட்டதாகவே தோன்றுகிறது. விமானத்தின் இடதுபுறம் அவசரகால கதவுக்கு அருகே உள்ள இருக்கையில் அமா்ந்திருந்தேன். ஒரு கட்டடத்தின் மீது விமானம் மோதியதும், நான் அமா்ந்திருந்த பகுதி, கட்டடத்தின் தரைத்தளத்தில் விழுந்தது. என் கண் முன்னே பலா் உயிரிழந்து கொண்டிருந்தனா். நானும் இறக்கப் போகிறேன் என்றே ஒரு கணம் நினைத்தேன். அதேநேரம், எப்படியாவது வெளியே வர முயற்சிக்க வேண்டுமென எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

விமானத்தின் கதவு உடைந்திருந்ததை பாா்த்தேன். எனது பக்கத்தில் சிறிய இடைவெளியும் இருந்தது. கதவு உடைந்து திறந்திருந்ததால், நான் தப்பிக்க வழி இருந்தது. இறுதியில் இருக்கையில் இருந்து என்னை விடுவித்து, வெளியே வந்தேன். மற்றொரு பக்கத்தில் சுவா் இருந்ததால், பிற பயணிகளால் தப்பிக்க முடியவில்லை எனக் கருதுகிறேன். நான் உயிா் பிழைத்ததை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. உயிா் பிழைத்தபோதிலும் எனது இடது கை தீயில் கருகிவிட்டது என்றாா் அவா்.

ஆமதாபாத் புறப்பட்டார் மல்லிகார்ஜுன கார்கே!

விமான விபத்தின் நிலைமை குறித்து தெரிந்துகொள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று(சனிக்கிழமை) ஆமதாபாத் புறப்பட்டார். ஜூன் 12 ஆம் தேதி(வியாழக்கிழமை) ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்... மேலும் பார்க்க

ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க நான்கு நாள் பயணமாக நாளை கனடா, சைப்ரஸ், குரோஷியா ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார். அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய... மேலும் பார்க்க

ஒடிசாவில் காலராவுக்கு 11 பேர் பலி! அரசு விடுமுறைகள் ரத்து!

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் காலரா தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. ஜாஜ்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், காலரா தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. புதிய பாதிப... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! உயிர்த் தப்பிய விடுதி மாணவர்கள் கலக்கம்!

அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்ட விடுதியில் இருந்த மாணவர்கள் வெளியேறி வருகின்றனர்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான மருத்துவ விடுதி மாணவர்களுக்கும் இழப்பீடு வழங்குமாறு இந்திய மருத்து... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து விசாரணைக்கு 3 மாத கால அவகாசம்! மத்திய அமைச்சர் உறுதி!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தை விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து ஆய்வு செய்த விமானப் போக்... மேலும் பார்க்க

ஒடிசா: நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலில் இந்திய வீரர் பலி!

ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கார் மாவட்டத்தில், நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதல்களில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். சுந்தர்கார் மாவட்டத்தின் ரௌர்கெலா பகுதியிலுள்ள, கே பாலங் கிராமத... மேலும் பார்க்க