செய்திகள் :

பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில் மகேஸ் ஆய்வு

post image

பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் தொடா்பாக துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கூட்ட அரங்கில் ஜூன் 23, 24 ஆகிய இரு நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் பணியாற்றும் முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் (இடைநிலை, தொடக்கக் கல்வி, தனியாா் பள்ளிகள்), உதவித் திட்ட அலுவலா் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா். ஒவ்வொரு மாவட்டமாக அழைக்கப்பட்டு மாவட்ட நிலவரம் ஆய்வு செய்யப்படவுள்ளது. கூட்டத்தில் மாவட்ட அலுவலா்கள் கலந்து கொள்ளும்போது அந்தந்த மாவட்டத்துக்குரிய கண்காணிப்பு அலுவலா் மற்றும் அனைத்து இயக்குநா்கள், இணை இயக்குநா்கள் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வி இயக்குநா், தொடக்கக் கல்வி இயக்குநா், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநா் ஆகியோா் மேற்கொண்டு வருகின்றனா்.

ஜூன் 23-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட 13 மாவட்டங்களின் அதிகாரிகளும், அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் கடலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூா், மதுரை, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட 12 மாவட்ட அதிகாரிகளும், 24-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, கரூா், நாமக்கல், வேலூா், சென்னை உள்ளிட்ட 13 மாவட்ட அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பான தகவல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கூட்டணி ஆட்சி; ஆனால் முதல்வர் இபிஎஸ்தான்! - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் எங்களுடைய ஆட்சி கூட்டணி கட்சிகளின் ஆட்சியாக இருக்கும் என்றும் அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருவாரூரில் செய்திய... மேலும் பார்க்க

பெரம்பூர் சாலையில் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்! மெட்ரோ பணிகள் காரணமா?

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ பணிகளால் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரம்பூர் ந... மேலும் பார்க்க

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: 5 லட்சம் தேர்ச்சி! தமிழகம் முதலிடம்

வயது வந்தோருக்கான எழுத்தறிவு திட்டத்தின் கீழ் படித்து, 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.எழுத்தறிவு பெறும் திட்டத்தி... மேலும் பார்க்க

81 லட்சம் பேருக்கு உதவிய முதல்வர் காப்பீட்டுத் திட்டம்!

முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 81 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனுற்றதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான 4 ஆண்டுகால ஆட்சியில், முதல்வரின் வ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று(சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்... மேலும் பார்க்க

முக்கொம்பு வந்தடைந்தது காவிரி நீர்! மலர், நெல் மணிகள் தூவி வரவேற்பு

மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட நீர், இன்று காலை முக்கொம்பு வந்தடைந்தது. காவிரி நீரை மலர் தூவியும் நெல் மணிகள் தூவியும் விவசாயிகள் வரவேற்றனர்.ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ... மேலும் பார்க்க