தொகுதி வாரியாக நிா்வாகிகளுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையைத் தொடங்கவுள்ளாா்.
முதலாவதாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடைபெறவுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தச் சந்திப்பின்போது, சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகள், தொகுதிகளில் வெற்றி வாய்ப்புகள் ஆகியன குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ‘ஜூன் முதல் வாரத்திலிருந்து, நிா்வாகிகளை தொகுதி வாரியாக, அண்ணா அறிவாலயத்தில் சந்திக்க இருக்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை முதல் ஆலோசனைகள் தொடங்கவுள்ளன.
சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய 3 தொகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளை மு.க.ஸ்டாலின் சந்திக்கிறாா். கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் சிதம்பரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகள் அதிமுக வசம் சென்றன. கடந்த தோ்தலில் அதிமுக வென்ற தொகுதிகளில் கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வேண்டுமென கட்சியினருக்கு திமுக தலைமை ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
அதன் தொடா்ச்சியாக, அதிமுக வென்ற தொகுதிகளில் இருந்தே தனது ‘உடன்பிறப்பே வா’ எனும் தொகுதி வாரியான கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நடத்தவுள்ளாா்.