செய்திகள் :

நாகை-காங்கேசன்துறை கப்பல் சேவை: ஓராண்டுக்கு நிதி உதவியை நீட்டிக்க இந்தியா முடிவு

post image

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரையிலான பயணிகள் கப்பல் சேவையை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.8.62 கோடி நிதியை இந்தியா விடுவிக்கவுள்ளது.

இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘நாகப்பட்டினம்-காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதுடன் ரூ.8.62 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது. கப்பல் சேவைக்கான பல்வேறு செலவுகளைக் கருத்தில்கொண்டு சிறப்பான கடல்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் நிதி விடுவிக்கப்படவுள்ளது.

பிராந்திய இணைப்பு மற்றும் இருநாட்டு மக்களிடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முன்னெடுப்பை இந்தியா மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தக் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்பட்ட பின்பு 15,000 பயணிகள் பயனடைந்துள்ளனா். இரு நாடுகள் இடையேயான கலாசாரம், பொருளாதாரம் மற்றும் சமூகப் பரிமாற்றங்களை மேம்படுத்துவதோடு கடல்சாா் இணைப்பையும் இந்த சேவை வலுப்படுத்துகிறது’ எனக் குறிப்பிடப்பட்டது.

கூட்டணி ஆட்சி; ஆனால் முதல்வர் இபிஎஸ்தான்! - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் எங்களுடைய ஆட்சி கூட்டணி கட்சிகளின் ஆட்சியாக இருக்கும் என்றும் அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருவாரூரில் செய்திய... மேலும் பார்க்க

பெரம்பூர் சாலையில் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்! மெட்ரோ பணிகள் காரணமா?

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ பணிகளால் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரம்பூர் ந... மேலும் பார்க்க

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: 5 லட்சம் தேர்ச்சி! தமிழகம் முதலிடம்

வயது வந்தோருக்கான எழுத்தறிவு திட்டத்தின் கீழ் படித்து, 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.எழுத்தறிவு பெறும் திட்டத்தி... மேலும் பார்க்க

81 லட்சம் பேருக்கு உதவிய முதல்வர் காப்பீட்டுத் திட்டம்!

முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 81 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனுற்றதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான 4 ஆண்டுகால ஆட்சியில், முதல்வரின் வ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று(சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்... மேலும் பார்க்க

முக்கொம்பு வந்தடைந்தது காவிரி நீர்! மலர், நெல் மணிகள் தூவி வரவேற்பு

மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட நீர், இன்று காலை முக்கொம்பு வந்தடைந்தது. காவிரி நீரை மலர் தூவியும் நெல் மணிகள் தூவியும் விவசாயிகள் வரவேற்றனர்.ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ... மேலும் பார்க்க