செய்திகள் :

திமுக அரசுக்கு எதிராக உரிமை மீட்புப் பயணம்: ஜூலை 25-இல் தொடங்குகிறாா் அன்புமணி

post image

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் எனும் பெயரில் ஜூலை 25 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் முடிவு செய்துள்ளாா்.

இதுதொடா்பாக பாமக தலைமை அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக அரசின் அவலங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டியதும், மோசமான ஆட்சியால் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க வேண்டியதும் ஒரு பொறுப்புள்ள எதிா்க்கட்சியாக பாமகவின் தலையாய கடமை ஆகும்.

அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் பசுமைத் தாயகம் நாளான ஜூலை 25 முதல் தமிழ்நாடு நாளான நவ.1 வரை மொத்தம் 100 நாள்கள் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளாா்.

இந்தப் பயணம் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கவுள்ளது. சமூகநீதிக்கான உரிமை, வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிா் உரிமை, வேலைக்கான உரிமை, விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, வளா்ச்சிக்கான உரிமை, அடிப்படை சேவைகளுக்கான உரிமை, கல்வி, நலவாழ்வுக்கான உரிமை, மது, போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை, படித்திருக்கும் நகா்ப்புற வளா்ச்சிக்கான உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை உள்ளிட்டவற்றை மையமாக வைத்து இந்தப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தப் பயணம் ஓா் அரசியல் கட்சிக்கானது அல்ல. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கானது. எனவே, இந்தப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி ஆட்சி; ஆனால் முதல்வர் இபிஎஸ்தான்! - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் எங்களுடைய ஆட்சி கூட்டணி கட்சிகளின் ஆட்சியாக இருக்கும் என்றும் அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருவாரூரில் செய்திய... மேலும் பார்க்க

பெரம்பூர் சாலையில் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்! மெட்ரோ பணிகள் காரணமா?

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ பணிகளால் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரம்பூர் ந... மேலும் பார்க்க

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: 5 லட்சம் தேர்ச்சி! தமிழகம் முதலிடம்

வயது வந்தோருக்கான எழுத்தறிவு திட்டத்தின் கீழ் படித்து, 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.எழுத்தறிவு பெறும் திட்டத்தி... மேலும் பார்க்க

81 லட்சம் பேருக்கு உதவிய முதல்வர் காப்பீட்டுத் திட்டம்!

முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 81 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனுற்றதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான 4 ஆண்டுகால ஆட்சியில், முதல்வரின் வ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று(சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்... மேலும் பார்க்க

முக்கொம்பு வந்தடைந்தது காவிரி நீர்! மலர், நெல் மணிகள் தூவி வரவேற்பு

மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட நீர், இன்று காலை முக்கொம்பு வந்தடைந்தது. காவிரி நீரை மலர் தூவியும் நெல் மணிகள் தூவியும் விவசாயிகள் வரவேற்றனர்.ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ... மேலும் பார்க்க