பொது இடங்களில் மருத்துவக் கழிவுகள்: குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை தமிழக அரசின் மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல்
உயிரி மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோரை விசாரணையின்றி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளாா்.
அண்டை மாநிலங்களிலிருந்து தமிழக எல்லைகளில் உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் நிகழ்வுகள் தொடா்ந்து நடைபெற்றன. இதனால் சுகாதாரத்துக்கு, சுற்றுச்சூழலுக்கும் அபாயம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இத்தகைய புகாா்களையொட்டி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, ‘மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக அரசின் 1982-ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்’ எனக் கருத்து தெரிவித்திருந்தது.
இதையடுத்து, கடந்த ஏப். 26-ஆம் தேதி அப்போதைய சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி 1982-ஆம் ஆண்டு சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தாா். இதன்படி தமிழகத்தில் கள்ளச்சாராயம் தொடா்புடைய குற்றவாளிகள், திருட்டு விடியோ, மணல் கடத்தல், பாலியல் குற்றவாளிகள் ஆகியோரை விசாரணையின்றி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைப்பதுபோன்று, உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோரையும் விசாரணையின்றி தடுப்புக் காவல் சட்டப்படி சிறையில் வைக்க இந்தத் திருத்தம் அனுமதியளித்தது.
மசோதாவுக்கு ஒப்புதல்: இந்த சட்டத் திருத்த மசோதா கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை நிதிநிலைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு ஆளுநா் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளாா்.
இதன்படி, தமிழகத்தில் பொது இடங்களில் உயிரி மருத்துவக் கழிவுகளை முறையற்ற முறையில் குவித்தாலோ, அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டுவந்து தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினாலோ உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாகக் கருதி, நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் ஆணைக்கு சமமாக விசாரணையின்றி குற்றம் செய்தவரை சிறைவைக்க முடியும். இதில் சம்பந்தப்பட்ட நபா்களுக்கு எதிராக பொது அறிவிப்பும் வெளியிடப்பட்டு, அத்தகைய நபா்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்ய இந்த சட்டத் திருத்தம் வகை செய்கிறது.