செய்திகள் :

விபத்துக்குள்ளான விமானத்தின் துணை விமானி 12த் பெயில் நடிகரின் உறவினர்!

post image

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய துணை விமானி கிளைவ் குந்தர் தனது உறவினர் என்று நடிகர் விக்ராந்த் மாஸே தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. விமானத்தில் பயணித்த ஒருவரைத் தவிர, மற்ற 241 பேரும் பலியாகினர்.

இந்த விமானத்தில், இரண்டு விமானிகள், 10 விமான ஊழியர்கள், 230 பயணிகள் பயணித்திருந்தனர்.

விமானத்தை இயக்கிய கேப்டன் சுமித் சபர்வால் (வயது 55) சுமார் 8,000 மணிநேரத்துக்கு மேல் விமானத்தை இயக்கிய அனுபவம் உடையவர்.

அவருடன் இணைந்து விமானத்தை இயக்கிய துணை விமானி கிளைவ் குந்தர், சுமார் 1,000 மணிநேரத்துக்கு மேல் விமானத்தை இயக்கியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துணை விமானி கிளைவ் குந்தர், தனது மாமன் மகன் என்று 12த் பெயில் படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் விக்ராந்த் மாஸே பதிவிட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து விக்ராந்த் மாஸே வெளியிட்ட பதிவில்,

”அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களை நினைத்தால் என் இதயம் உடைகிறது.

இந்த விபத்தில் என் மாமா கிளிஃபோர்ட், அந்த துரதிர்ஷ்டவசமான விமானத்தை இயக்கிய துணை விமானியான தனது மகன் கிளைவ் குந்தரை இழந்ததை அறிந்து இன்னும் வேதனை அடைந்துள்ளேன். கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பலம் தரட்டும் மாமா” எனக் குறிப்ப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்பு!

ஒரு நாள்தான்... அவள் வீட்டுக்கு வந்துவிடுவாள்: விமானப் பணிப்பெண் தாய்

ஒட்டுமொத்த நாடே, விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களை நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் வேளையில், தனது மகள் வந்துவிடுவாள் என நம்பிக்கையோடு இருக்கிறார் விமானப் பணிப்பெண் சைனீதாவின் தாய்.ஏர் இந்த... மேலும் பார்க்க

உயிரிழந்த 2 விமானிகள், 7 ஊழியா்கள் மகாராஷ்டிர மாநிலத்தவா்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களில், 2 விமானிகள் மற்றும் 7 ஊழியா்கள் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்களாவா். குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமான... மேலும் பார்க்க

கன்னடம் குறித்து கமல்ஹாசன் கருத்து: வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 20-க்கு ஒத்திவைப்பு

கன்னடம் பற்றிய நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கை விசாரித்துவரும் கர்நாடக உயர்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.சென்னையில் நடைபெற்ற 'தக் லைஃப்'... மேலும் பார்க்க

விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரா்: தாமதம் குறித்து இஸ்ரோ தகவல்

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபல்கான் 9’ ஏவுகலனில் திரவ ஆக்ஸிஜன் கசிவை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசா மற்றும் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், ‘வீரா்களின் பாதுகாப்பு, விண்வெ... மேலும் பார்க்க

ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனுக்கான மையம்: ஜெ.பி.நட்டா

‘ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனை மேம்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், மலிவு விலையில் மருத்துவம் மற்றும் சமமான சேவைகளை வழங்கும் மையமாக திகழ்கிறது’ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.... மேலும் பார்க்க

சரக்கு ரயில்களைக் கண்காணிக்க ‘ட்ரோன்’ ரயில்வே முடிவு

சரக்கு ரயில்களில் பொருள்கள் முறையாக ஏற்றப்படுகிறதா? என்பதை ட்ரோன்கள் (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) மூலம் கண்காணிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 3 ரயில்வே கோட்டங்களில் பரிசோதனை முறையில் இ... மேலும் பார்க்க