Vijay Sethupathi: " `வாத்தியார்' கதாபாத்திரம்... பெரிய வரமா நினைக்கிறேன்!" - நெக...
விமானத்தில் அதிர்ஷ்டமான இருக்கையாக 11ஏ மீண்டும் நிரூபணம்! ஏன்? எப்படி?
அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 242 பேரில் 241 பேரும் பலியாக, ஒரே ஒருவர் உயிர் பிழைத்தார்.
நிச்சயம், ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்து, அதில் பலியானவர்களை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் அனைவருக்குமே, ஒரே ஒருவர் உயிர் பிழைத்தார் என்ற தகவல் நிச்சயம் ஆச்சரியத்தை அளித்திருக்கும்.
விமானம் வெறுமனே, தரையில் விழுந்திருந்தால் பரவாயில்லை, அது விழுந்த வேகத்தில், அதில் இருந்த எரிபொருளால் வெடித்து மிகப்பெரிய தீப்பிழம்பைக் கக்கியதைப் பார்த்தவர்கள், இப்படி ஒரு விபத்தில் ஒருவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதிய நிலையிலும், ஒருவர் அதுவும் எழுந்து ஓடிக் கொண்டிருந்தார் என்றால் நம்பத்தான் முடியவில்லை. நடந்திருக்கிறது.
இதற்குக் காரணம், உயிர் பிழைத்த விஸ்வாஸ் குமார் அமர்ந்திருந்தது 11ஏ இருக்கை என்பதுதான். இது எப்போதும் அதிர்ஷ்டமான இருக்கை என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கிறது. அது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
போயிங் 787 டிரீம்லைனர் விமானத்தின் உயர்தர வகுப்புக்கு அடுத்த ஜன்னலுக்கு அருகே அமைந்திருக்கும். இது மற்ற இருக்கைகளைவிட சற்று இடைவெளி அதிகமாக இருக்கும், அவசர கதவுக்கு மிக அருகில் இருக்கும் இருக்கை. மேலும், இது விமானத்தின் இறக்கைப் பகுதிக்கு அருகே இருக்கும். அதாவது, விமானத்துடன் இறக்கைப் பகுதி ஒட்டப்பட்டிருக்கும் இடம். எனவே, இது விமானத்தின் மிகவும் பலமான பகுதியாகவும் அமைந்திருக்குமாம்.