Border: நெதர்லாந்தில் தூங்கி, பெல்ஜியத்தில் விழிக்கும் மக்கள்; வீடுகளில் இருக்கு...
ஃபகத் ஃபாசில் - எஸ்.ஜே.சூர்யா படம் கைவிடப்பட காரணம் என்ன? விபின் தாஸ் பதில்!
மலையாள இயக்குநர் விபின் தாஸ் ஃபகத் ஃபாசில் - எஸ்.ஜே.சூர்யா படம் கைவிடப்பட்டது எனக் கூறியுள்ளார்.
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் மூலம் விபின் தாஸ் பிரபல இயக்குநராக மாறியிருக்கிறார்.
இவரது இயக்கத்தில் மோகன்லால் நடிப்பதாகவும் எஸ்.ஜே.சூர்யா - ஃபக்த் ஃபாசில் புதிய படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் விபன் தாஸ் இது குறித்து கூறியதாவது:
மோகன் லால் சாரிடம் ஒரு கதைச் சொல்லியிருந்தேன். அது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அந்தப் படம் கைவிடப்பட்டது.
அடுத்ததாக, எஸ்.ஜே.சூர்யா - ஃப்கத் ஃபாசிலும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. இந்தப் படமும் தேதி, பட்ஜெட் காரணமாக கைவிடப்பட்டது.
இவர்களுக்குப் பதிலாக மற்ற 2 நடிகர்களை வைத்து இந்தப் படம் விரைவில் எடுப்பேன் எனக் கூறினார்.
விபின் தாஸ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற வாழை படத்தின் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது.