செய்திகள் :

நத்தம் அருகே சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ஓட்டுநர்!

post image

நத்தம் அருகே சாலை தடுப்பில் ஓடுகள் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில், ஆனால் ஓட்டுநர் நல்வாய்ப்பாக காயங்கள் ஏதுவுமின்றி உயிர் தப்பினார்.

அடிக்கடி சாலை தடுப்புகளால் தொடரும் விபத்துகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் பிரவீன்குமார் (35). இவர் கேரளம் மாநிலம் திருச்சூரில் இருந்து லாரியில் ஓடுகள் ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எரம நாயக்கன்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையின் நடுவே இருந்த தடுப்பில் இருந்த எச்சரிக்கை விளக்கு எரியாததால் லாரி சாலையில் இருந்த சென்டர் மீடியனில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் முன்பக்க டயர்கள் சேதமடைந்து எண்ணெய் சாலையில் வழிந்தோடியது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக லாரி ஓட்டுநர் காயங்கள் ஏதுவுமின்றி உயிர் தப்பினார்.

இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் முதல் கொட்டாம்பட்டி வரை உள்ள 52 கிலோமீட்டர் தூரத்தில் கோபால்பட்டி எரமநாயக்கன்பட்டி மெய்யம்பட்டி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சாலை தடுப்புகளில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கி சேதம் அடைந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதுபோன்று அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் உள்ள சாலை தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதிரடியாக பவுனுக்கு ரூ.1,560 அதிகரித்த தங்கம் விலை!

ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது: தொல். திருமாவளவன்

திருச்சி: ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது என விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:... மேலும் பார்க்க

மாவட்ட நீதிபதி கார் டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் 4 பேர் பலி

திருச்செந்தூரில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த மாவட்ட நீதிபதி கார், முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இரண்டு பேர் ... மேலும் பார்க்க

தில்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதி நீக்கம்

தில்லி பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகளில் மனுஸ்மிருதி சாா்ந்த பாடங்களுக்கு எதிராக தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்த வந்த நிலையில், பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் இ... மேலும் பார்க்க

விஜய் ரூபானிக்கு அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம்!

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்தத் தலைவரான விஜய் ரூபானியும்(68) ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக விமானத்... மேலும் பார்க்க

விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்பு!

அகமதாபாத்: இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமானத் துறை நிபுணா்கள் தெரிவித்த நிலையில்... மேலும் பார்க்க

ரூ.73 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.8 உயா்ந்து ரூ.72,808-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடித்து வந்த நிலையில், கடந... மேலும் பார்க்க