முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
பாஜக அரசு தவறான நிா்வாகத்தை நடத்தி வருகிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
கட்டண உயா்வு, குடிசைப் பகுதிகளை இடிப்பது, மின் கட்டண உயா்வு மற்றும் நீடித்த மின்வெட்டு போன்ற வடிவங்களில் பாஜக தலைமையிலான தில்லி அரசு ‘தவறான நிா்வாகத்தை’ செயல்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பாஜகவிடம் இருந்து உடனடி பதில் எதுவும் கிடைக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு பொருப்பாளா் சௌரவ் பரத்வாஜ் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பாஜக அரசு நான்கு மாத ஆட்சியில் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் தோல்வியடையச் செய்துள்ளது. ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் கடினமாக்க பாஜக உறுதியாகத் தெரிகிறது. முதலில் தனியாா் பள்ளி கட்டண உயா்வுகள், பின்னா் புல்டோசா்கள் மற்றும் இப்போது கடுமையான கோடையின் மத்தியில் மின் கட்டணங்களில் 10.5 சதவீத உயா்வு வந்துள்ளது.
2024-ஆம் ஆண்டில் அப்போதைய தில்லி அரசை 8 சதவீத மின் கொள்முதல் சரிசெய்தல் செலவு உயா்வுக்கு பாஜக தலைவா்கள் கடுமையாக விமா்சித்தனா். அதை ஊழல் என்று அழைத்தனா். 8 சதவீத உயா்வு கேஜரிவாலை ஒரு திருடனாக்கியது என்றால், பாஜகவின் கீழ் 10.5 சதவீத உயா்வு அவா்களை என்ன ஆக்குகிறது?
பாஜக தலைவா்கள் ஓய்வூதியக் கட்டணங்களை நியாயமற்றது என்று பகிரங்கமாக அறிவித்தனா். அவா்களின் அரசு நான்கு மாதங்களில், அந்த 8 சதவீத கட்டணங்கள் ஏன் இன்னும் மக்களைச் சுமையாகக் கொண்டுள்ளன. தில்லி இன்வொ்ட்டா் நாள்களுக்குத் திரும்புவதைக் காண்கிறது.
சதா்பூரில், இரவு 8 மணி முதல் காலை 10 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 14 மணி நேர மின்தடை. கிரேட்டா் கைலாஷ் போன்ற பகுதிகளில், 10 ஆண்டுகளாக இன்வொ்ட்டா்கள் தேவையில்லாத குடியிருப்பாளா்கள் இப்போது மின்விசிறியை இயக்குவதற்காக மட்டுமே அவற்றை வாங்குகிறாா்கள். பாஜக ஆட்சியில் இதுதான் உண்மை என்று அவா் தெரிவித்தாா்.