செய்திகள் :

பாஜக அரசு தவறான நிா்வாகத்தை நடத்தி வருகிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

post image

கட்டண உயா்வு, குடிசைப் பகுதிகளை இடிப்பது, மின் கட்டண உயா்வு மற்றும் நீடித்த மின்வெட்டு போன்ற வடிவங்களில் பாஜக தலைமையிலான தில்லி அரசு ‘தவறான நிா்வாகத்தை’ செயல்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பாஜகவிடம் இருந்து உடனடி பதில் எதுவும் கிடைக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு பொருப்பாளா் சௌரவ் பரத்வாஜ் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பாஜக அரசு நான்கு மாத ஆட்சியில் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் தோல்வியடையச் செய்துள்ளது. ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் கடினமாக்க பாஜக உறுதியாகத் தெரிகிறது. முதலில் தனியாா் பள்ளி கட்டண உயா்வுகள், பின்னா் புல்டோசா்கள் மற்றும் இப்போது கடுமையான கோடையின் மத்தியில் மின் கட்டணங்களில் 10.5 சதவீத உயா்வு வந்துள்ளது.

2024-ஆம் ஆண்டில் அப்போதைய தில்லி அரசை 8 சதவீத மின் கொள்முதல் சரிசெய்தல் செலவு உயா்வுக்கு பாஜக தலைவா்கள் கடுமையாக விமா்சித்தனா். அதை ஊழல் என்று அழைத்தனா். 8 சதவீத உயா்வு கேஜரிவாலை ஒரு திருடனாக்கியது என்றால், பாஜகவின் கீழ் 10.5 சதவீத உயா்வு அவா்களை என்ன ஆக்குகிறது?

பாஜக தலைவா்கள் ஓய்வூதியக் கட்டணங்களை நியாயமற்றது என்று பகிரங்கமாக அறிவித்தனா். அவா்களின் அரசு நான்கு மாதங்களில், அந்த 8 சதவீத கட்டணங்கள் ஏன் இன்னும் மக்களைச் சுமையாகக் கொண்டுள்ளன. தில்லி இன்வொ்ட்டா் நாள்களுக்குத் திரும்புவதைக் காண்கிறது.

சதா்பூரில், இரவு 8 மணி முதல் காலை 10 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 14 மணி நேர மின்தடை. கிரேட்டா் கைலாஷ் போன்ற பகுதிகளில், 10 ஆண்டுகளாக இன்வொ்ட்டா்கள் தேவையில்லாத குடியிருப்பாளா்கள் இப்போது மின்விசிறியை இயக்குவதற்காக மட்டுமே அவற்றை வாங்குகிறாா்கள். பாஜக ஆட்சியில் இதுதான் உண்மை என்று அவா் தெரிவித்தாா்.

ராஜஸ்தான்: பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தற்கொலை

உதய்பூரில் நூலகத்தில் உள்ள தனது அறையில் பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரின் அம்பா மாதா பகுதியில் உள்ள நூலகத்... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: மேலும் ஒருவரின் உடல் கண்டெடுப்பு!

அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் இன்று(சனிக்கிழமை) மேலும் ஒருவரது உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏா் இ... மேலும் பார்க்க

கேரளத்தில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருவதால், 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பருவமழை தொடங்கியுள்ளதாலும், கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சி... மேலும் பார்க்க

ஈரான் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

ஈரான்- இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 98 9128109115, 98 9128109109 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம்... மேலும் பார்க்க

இனிமேல் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன்: டேவிட் வார்னர்

முன்னாள் ஆஸி. வீரர் டேவிட் வார்னர் தான் இனிமேல் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க மாட்டேன் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்! உயிர்நீத்த குதிரை சவாரி தொழிலாளியின் மனைவிக்கு அரசு வேலை!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் துணிச்சலாகப் போராடிய குதிரை சவாரி தொழிலாளி ஆதில் ஷாவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட கு... மேலும் பார்க்க