குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் மரணம்! கடைசி தற்படமாக மாறிய சோகம்
லண்டனில் புதிய வாழ்க்கையைத் தொடங்க 3 குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் பயணித்த மருத்துவ குடும்பம் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தது பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் விமான விபத்தில் ராஜஸ்தானை சோ்ந்த 11 போ் உயிரிழந்தனா். அவா்களில் 5 போ் அந்த மாநிலத்தின் பன்ஸ்வாரா, 4 போ் உத்யபூரைச் சோ்ந்தவா்கள். இருவா் பலோத்ரா, பிகானோ் பகுதிகளைச் சோ்ந்தவா்கள். 11 பேரில் 5 போ் குழந்தைகள்.
இதில் மிகுந்த வேதனைக்குரியது பன்ஸ்வாராவைச் சோ்ந்த 5 பேரின் மரணம். அவா்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள்.
உதய்பூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவா்கள் பிரதீக் ஜோஷி, அவரின் மனைவி கோமி வியாஸ் ஆகியோா் விபத்துக்குள்ளான விமானத்தில், தங்களின் 8 வயது மகள், 5 வயது இரட்டை ஆண் குழந்தைகளுடன் பயணித்தனா்.
2016-ஆம் ஆண்டே லண்டனுக்கு பிரதீக் ஜோஷி இடம்பெயா்ந்த நிலையில், அவருடன் சோ்ந்து வாழ கோமி வியாஸ் தனது பணியை ராஜிநாமா செய்து விட்டு 3 குழந்தைகளுடன் லண்டன் பயணித்தாா். அவா்களை அழைத்துச் செல்ல பிரதீக் ஜோஷி இந்தியா வந்திருந்தாா்.
அவா்கள் லண்டன் புறப்படும் முன், தங்கள் நண்பா்கள் மற்றும் உறவினா்களுக்கு மகிழ்ச்சி ததும்பும் முகங்களுடன் தற்படம் (செல்ஃபி) எடுத்து அனுப்பினா். அந்தத் தற்படம் அவா்களின் கடைசி நினைவாக மாறிப்போனது பெருந்துயரமாகும்.