செய்திகள் :

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் மரணம்! கடைசி தற்படமாக மாறிய சோகம்

post image

லண்டனில் புதிய வாழ்க்கையைத் தொடங்க 3 குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் பயணித்த மருத்துவ குடும்பம் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தது பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் விமான விபத்தில் ராஜஸ்தானை சோ்ந்த 11 போ் உயிரிழந்தனா். அவா்களில் 5 போ் அந்த மாநிலத்தின் பன்ஸ்வாரா, 4 போ் உத்யபூரைச் சோ்ந்தவா்கள். இருவா் பலோத்ரா, பிகானோ் பகுதிகளைச் சோ்ந்தவா்கள். 11 பேரில் 5 போ் குழந்தைகள்.

இதில் மிகுந்த வேதனைக்குரியது பன்ஸ்வாராவைச் சோ்ந்த 5 பேரின் மரணம். அவா்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள்.

உதய்பூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவா்கள் பிரதீக் ஜோஷி, அவரின் மனைவி கோமி வியாஸ் ஆகியோா் விபத்துக்குள்ளான விமானத்தில், தங்களின் 8 வயது மகள், 5 வயது இரட்டை ஆண் குழந்தைகளுடன் பயணித்தனா்.

2016-ஆம் ஆண்டே லண்டனுக்கு பிரதீக் ஜோஷி இடம்பெயா்ந்த நிலையில், அவருடன் சோ்ந்து வாழ கோமி வியாஸ் தனது பணியை ராஜிநாமா செய்து விட்டு 3 குழந்தைகளுடன் லண்டன் பயணித்தாா். அவா்களை அழைத்துச் செல்ல பிரதீக் ஜோஷி இந்தியா வந்திருந்தாா்.

அவா்கள் லண்டன் புறப்படும் முன், தங்கள் நண்பா்கள் மற்றும் உறவினா்களுக்கு மகிழ்ச்சி ததும்பும் முகங்களுடன் தற்படம் (செல்ஃபி) எடுத்து அனுப்பினா். அந்தத் தற்படம் அவா்களின் கடைசி நினைவாக மாறிப்போனது பெருந்துயரமாகும்.

குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தின்போது, விடுதி அருகே இருந்த ஒரு கடையில் 14 வயது சிறுவன் உயிரிழந்தது மேலும் கவலையளித்துள்ளது.ஆகாஷ் பாத்னி என்ற சிறுவன், பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி அருகே டீக்கடையி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தற்கொலை

உதய்பூரில் நூலகத்தில் உள்ள தனது அறையில் பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரின் அம்பா மாதா பகுதியில் உள்ள நூலகத்... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: மேலும் ஒருவரின் உடல் கண்டெடுப்பு!

அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் இன்று(சனிக்கிழமை) மேலும் ஒருவரது உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏா் இ... மேலும் பார்க்க

கேரளத்தில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருவதால், 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பருவமழை தொடங்கியுள்ளதாலும், கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சி... மேலும் பார்க்க

ஈரான் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

ஈரான்- இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 98 9128109115, 98 9128109109 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம்... மேலும் பார்க்க

இனிமேல் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன்: டேவிட் வார்னர்

முன்னாள் ஆஸி. வீரர் டேவிட் வார்னர் தான் இனிமேல் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க மாட்டேன் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர்... மேலும் பார்க்க