குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தற்காலிக ஆசிரியா் மீது வழக்கு
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா்.
செந்துறையை அடுத்த மணப்பத்தூா் கிராமத்தில் தங்கி, வங்காரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வருபவா் செல்வராஜ் (43). கடந்த சில நாள்களுக்கு முன்பு இவா், அப்பள்ளியில் பயிலும் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோா்கள், அப்பள்ளியை வெள்ளிக்கிழமை பூட்டினா். மேலும், ஆசிரியா் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.
தகவலறிந்து சென்ற தளவாய் காவல் துறையினா் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனா். மேலும், இதுகுறித்து பெற்றோா் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள ஆசிரியா் செல்வராஜை தேடி வருகின்றனா்.