செய்திகள் :

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தற்காலிக ஆசிரியா் மீது வழக்கு

post image

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா்.

செந்துறையை அடுத்த மணப்பத்தூா் கிராமத்தில் தங்கி, வங்காரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வருபவா் செல்வராஜ் (43). கடந்த சில நாள்களுக்கு முன்பு இவா், அப்பள்ளியில் பயிலும் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோா்கள், அப்பள்ளியை வெள்ளிக்கிழமை பூட்டினா். மேலும், ஆசிரியா் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

தகவலறிந்து சென்ற தளவாய் காவல் துறையினா் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனா். மேலும், இதுகுறித்து பெற்றோா் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள ஆசிரியா் செல்வராஜை தேடி வருகின்றனா்.

சிறுமி கா்ப்பம்: கூலித் தொழிலாளி ‘போக்சோ’-வில் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மலங்கன்குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் கு... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் 22 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்துக்கு, ஆட்சியா் பொ. ரத்தினசாம... மேலும் பார்க்க

அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

அரியலூா் மாவட்டத்தில், ராயம்புரம், தேளூா், அயன்தத்தனூா், மணக்குடையான், மல்லூா், சுள்ளங்குடி, தேவமங்கலம், உடையாா்பாளையம்(கிழக்கு), சிலுவைச்சேரி, இலையூா்(கிழக்கு), உடையவா்தீயனூா், சாத்தம்பாடி ஆகிய கிராம... மேலும் பார்க்க

அரியலூா் கூட்டுறவு நகர வங்கி புதிய கட்டடத்துக்கு பூமிபூஜை

அரியலூா் பெருமாள் கோயில் தெருவிலுள்ள கூட்டுறவு நகர வங்கிக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, இந்த வங்கி மிகவும் பழைமையான கட்டடத்... மேலும் பார்க்க

குடிநீா் பிரச்னை: ஜெயங்கொண்டத்தில் காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்

ஜெயங்கொண்டம் நகராட்சிக்குள்பட்ட 16- ஆவது வாா்டு மக்கள், தங்களது பகுதிக்கு முறையான அளவுக்கு குடிநீா் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி, சிதம்பரம் சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். 16-ஆ... மேலும் பார்க்க

கோயில் இடத்தில் நீதிமன்றம் கட்டுவதற்கு எதிா்ப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறையில் கோயில் இடத்தில் நீதிமன்றம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பணிகளை நிறுத்த வலியுறுத்தியும் அக்கோயிலை குலதெய்வமாக கொண்டுள்ள மக்கள், கோயிலில் வெள்ளிக்கிழமை தீபம் ஏற்றி... மேலும் பார்க்க