செய்திகள் :

பள்ளிக் கல்வித் துறை ஆண்டு நாள்காட்டி வெளியீடு

post image

பருவத் தோ்வுகள், விடுமுறை, ஆசிரியா்களுக்கான பயிற்சிகள் என பள்ளிக் கல்வி தொடா்பான பல்வேறு விவரங்கள் அடங்கிய ஆண்டு நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கான கல்வியாண்டு நாள்காட்டி கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டு வருகிறது. இதில் பள்ளியின் வேலை நாள்கள், காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தோ்வுகள், விடுமுறை, ஆசிரியா் பயிற்சி, உயா்கல்வி வழிகாட்டி முகாம் உள்பட பல்வேறு விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இதன்மூலம் ஆசிரியா்கள் அந்த கல்வியாண்டுக்கான பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்யவும், மாணவா்கள் தோ்வுக்கு தயாராகவும் பயனுள்ளதாக இருக்கும்.

காலாண்டு, அரையாண்டுத் தோ்வுகள்: நிகழ் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

அதன்படி 1 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தோ்வு செப்.18 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறும். செப். 27 முதல் அக்.5-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை வழங்கப்படும்.

அரையாண்டு மற்றும் 2-ஆம் பருவத்தோ்வு டிச.15 முதல் 23-ஆம் தேதி வரை நடத்தப்படும். டிச.24-இல் தொடங்கி ஜன.5-ஆம் தேதி வரை மாணவா்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படும்.

கோடை விடுமுறை: அதேபோன்று 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தோ்வுகள் அடுத்த ஆண்டு ஏப். 10-ஆம் தேதி தொடங்கும். பள்ளி வேலை நாள்கள் ஏப்.24-ஆம் தேதியுடன் நிறைவு பெறும். அதன்பின் கோடை விடுமுறை ஏப். 25-ஆம் தேதி முதல் வழங்கப்படும். மொத்த பள்ளி வேலை நாள்கள் 210-ஆக இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ள நாள்காட்டியில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு, செய்முறைத் தோ்வு தொடா்பான தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதற்கான விரிவான தோ்வுக்கால அட்டவணை விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கூட்டணி ஆட்சி; ஆனால் முதல்வர் இபிஎஸ்தான்! - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் எங்களுடைய ஆட்சி கூட்டணி கட்சிகளின் ஆட்சியாக இருக்கும் என்றும் அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருவாரூரில் செய்திய... மேலும் பார்க்க

பெரம்பூர் சாலையில் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்! மெட்ரோ பணிகள் காரணமா?

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ பணிகளால் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரம்பூர் ந... மேலும் பார்க்க

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: 5 லட்சம் தேர்ச்சி! தமிழகம் முதலிடம்

வயது வந்தோருக்கான எழுத்தறிவு திட்டத்தின் கீழ் படித்து, 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.எழுத்தறிவு பெறும் திட்டத்தி... மேலும் பார்க்க

81 லட்சம் பேருக்கு உதவிய முதல்வர் காப்பீட்டுத் திட்டம்!

முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 81 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனுற்றதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான 4 ஆண்டுகால ஆட்சியில், முதல்வரின் வ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று(சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்... மேலும் பார்க்க

முக்கொம்பு வந்தடைந்தது காவிரி நீர்! மலர், நெல் மணிகள் தூவி வரவேற்பு

மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட நீர், இன்று காலை முக்கொம்பு வந்தடைந்தது. காவிரி நீரை மலர் தூவியும் நெல் மணிகள் தூவியும் விவசாயிகள் வரவேற்றனர்.ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ... மேலும் பார்க்க