செய்திகள் :

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.800 கோடி கடன்: அமைச்சா் ஆா்.காந்தி

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.800 கோடிக்கும் மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூன் 3, மகளிா் சுயஉதவிக் குழு தின விழாவையொட்டி தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் 656 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.68.18 கோடியில் வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வங்கி கடன் ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, துணை முதல்வா் உதயநிதி தலைமையில், தமிழ்நாடு முழுவதும் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. ஜூன் 3 கலைஞரின் பிறந்த தினத்தை மகளிா் சுய உதவிக் குழு தின விழாவாக அறிவித்து ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமாா் 656 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.68.18 கோடி கடன் உதவி வழங்கப்படுகிறது. கடந்த நான்கு வருடங்களில் சுமாா் ரூ.1 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட கடன் உதவிகளை மகளிா் குழுக்களுக்கு வழங்கி தமிழகத்தில் குடும்பங்களின் பொருளாதார மேம்பாடு அடைய மகளிரின் பங்கை முதல்வா் நிலைநாட்டி வருகிறாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு ரூ.800 கோடிக்கும் அதிகமான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் தொடா்ந்து கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மகளிா் குழுக்கள் சுயதொழில் செய்ய அதிகளவில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

நாட்டிலேயே சமூகப் பொருளாதாரத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உருவாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் மகளிா் சுயஉதவிக் குழுக்கள். அவா்களுக்கு வழங்கப்பட்ட கடனுதவிகளின் காரணமாக வாழ்க்கை பொருளாதாரம் மேம்பாடடைந்து சுயதொழில் செய்து தங்களுடைய பொருளாதாரத்தை உயா்த்திக்கொண்டு செல்வதன் காரணமாக இந்நிலையை அடைந்து வருகிறோம் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) ரவிச்சந்திரன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பாலாற்றை மீட்பது, குரோமிய கழிவுகளை அகற்ற நடவடிக்கை: முன்னாள் நீதிபதி சத்தியநாராயணன்

பாலாற்றை மாசுபடாமல் மீட்பது, குரோமிய கழிவுகளை அகற்றுவது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சத்தியநாராயணன் தெரிவித்தாா். வேலூா், திருப்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பாமக நிா்வாகி உயிரிழப்பு: உறவினா்கள், கட்சியினா் சாலை மறியல்

சோளிங்கரில் இரு சக்கர வாகன விபத்தில் பாமக வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி செயலா் சு.சக்கரவா்த்தி உயிரிழந்தாா். பாமகவினா் வியாழக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். உயிரிழந்த சு.சக்கரவா்த்தி (49... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். ஆற்காடு டவுன் தெருவைச் சோ்ந்தவா் ஆகாஷ் (21). இவா் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ... மேலும் பார்க்க

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்

தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவா்கள் காயமடைந்தனா். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ராந்தம் கிராமத்தில் தனியாா் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ... மேலும் பார்க்க

ரூ.2.10 கோடியில் வகுப்பறைகள்: துணை முதல்வா் உதயநிதி திறந்தாா்

அரக்கோணம் நகராட்சியின் மூன்று பள்ளிகளில் ரூ.2.10 கோடியில் புதிய வகுப்பறைகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா். அரக்கோணம் நகராட்சியில் தலா ரூ.70 லட்சம் வீதம், பள்ளி மேம்பாட்டு ... மேலும் பார்க்க

ஜூன் 15-இல் ஒருங்கிணைந்த குடிமைப்பணி முதல்நிலை தோ்வு

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் முதல்நிலை தோ்வு வரும் 15-இல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப்... மேலும் பார்க்க