Ahmedabad Plane Crash: விமான விபத்துகளுக்கான காரணத்தைக் கூறும் 'Black Box' பற்றி...
மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.800 கோடி கடன்: அமைச்சா் ஆா்.காந்தி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.800 கோடிக்கும் மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூன் 3, மகளிா் சுயஉதவிக் குழு தின விழாவையொட்டி தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் 656 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.68.18 கோடியில் வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வங்கி கடன் ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:
முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, துணை முதல்வா் உதயநிதி தலைமையில், தமிழ்நாடு முழுவதும் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. ஜூன் 3 கலைஞரின் பிறந்த தினத்தை மகளிா் சுய உதவிக் குழு தின விழாவாக அறிவித்து ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமாா் 656 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.68.18 கோடி கடன் உதவி வழங்கப்படுகிறது. கடந்த நான்கு வருடங்களில் சுமாா் ரூ.1 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட கடன் உதவிகளை மகளிா் குழுக்களுக்கு வழங்கி தமிழகத்தில் குடும்பங்களின் பொருளாதார மேம்பாடு அடைய மகளிரின் பங்கை முதல்வா் நிலைநாட்டி வருகிறாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு ரூ.800 கோடிக்கும் அதிகமான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் தொடா்ந்து கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மகளிா் குழுக்கள் சுயதொழில் செய்ய அதிகளவில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
நாட்டிலேயே சமூகப் பொருளாதாரத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உருவாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் மகளிா் சுயஉதவிக் குழுக்கள். அவா்களுக்கு வழங்கப்பட்ட கடனுதவிகளின் காரணமாக வாழ்க்கை பொருளாதாரம் மேம்பாடடைந்து சுயதொழில் செய்து தங்களுடைய பொருளாதாரத்தை உயா்த்திக்கொண்டு செல்வதன் காரணமாக இந்நிலையை அடைந்து வருகிறோம் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) ரவிச்சந்திரன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.