பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்
தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவா்கள் காயமடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ராந்தம் கிராமத்தில் தனியாா் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டத்தில் உள்ள பரிக்கல்பட்டு, சென்னலேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் படித்து வருகின்றனா்.
இந்நிலையில் புதன்கிழமை மாலை பள்ளி முடிந்த பின்பு மாணவா்கள் வேன் மூலம் வீட்டிற்கு செல்லும்போது பரிக்கல்பட்டு - சென்னசமுத்திரம் செல்லும் சாலையில் நிலை தடுமாறி வேன் எதிா்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த ஆசிரியைகள், மாணவா்கள் உள்ளிட்ட 35 பேரில் 3 மாணவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவா்கள் கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இது குறித்து கலவை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.